2024 – 25 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை – முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராகப் பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார்.

‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முதல்முறையாக இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய தொடக்க உரையில்,

இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. 100 ஆண்டுக்கு முன்பு 1924இல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது.

இவ்வாறு தொடங்கிய அவர் தொடர்ந்த உரையில் வெளியிட்ட முக்கிய அம்சங்கள்….

▪️ சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ 2 கோடி ஒதுக்கீடு

▪️ அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

▪️ தமிழ் மொழியை நவீனப்படுத்த ஏஐ (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு.

▪️ முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

▪️ ரூ 65 இலட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

▪️ கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

▪️ கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ 17 கோடி செலவில் அமைக்கப்படும்.

▪️ சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

▪️ 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்ட ரூ 356 கோடி ஒதுக்கீடு.

▪️ 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ 500 கோடி ஒதுக்கீடு.

▪️ முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்

▪️ நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 இலட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.

▪️ சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ 500 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ 300 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னை கடற்கரைப் பகுதிகளை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு.

▪️ வடசென்னைப் பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ 1000 கோடி ஒதுக்கீடு.

▪️ மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ 5 கோடி ஒதுக்கீடு

▪️ அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ 1500 கோடி ஒதுக்கீடு.

▪️ சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ 430 கோடியில் புதிய திட்டம்.

▪️ வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்

▪️ சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ 500 கோடி ஒதுக்கீடு

▪️ நாமக்கல்லில் ரூ 358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

▪️ 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்; கலைஞரின் கனவு இல்லம் என இத்திட்டத்திற்கு பெயர் சூட்டல்

▪️ கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ 1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

▪️ கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ 13,720 கோடி ஒதுக்கீடு

▪️ மகளிர் இலவசப் பேருந்துப் பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ 3050 கோடி ஒதுக்கீடு

▪️ அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

▪️ தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ 600 கோடி ஒதுக்கீடு

▪️ உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.

▪️ பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ 300 கோடியில் உருவாக்கப்படும்

▪️ இல்லம் தேடிக் கல்வித் திட்டத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு

▪️ பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ 1000 கோடி ஒதுக்கீடு

▪️ கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்.

▪️ பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ 26 கோடி ஒதுக்கீடு.

▪️ கோவையில் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.

▪️ ஒரு இலட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ 2500 கோடி ஒதுக்கீடு

▪️ நான் முதல்வன் திட்டத்திற்கு ரூ 200 கோடி ஒதுக்கீடு

▪️ தமிழ்ப்புதல்வன் என்ற புதிய திட்டத்திற்கு ரூ 360 கோடி ஒதுக்கீடு.

▪️ தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் புதிய சிப்காட் பூங்கா ரூ 120 கோடியில் அமைக்கப்படும்.

▪️ விருதுநகர், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்

▪️ குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும்

▪️ மதுரையில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.

▪️ மருத்துவத்துறைக்கு கடந்த ஆண்டை விடக் கூடுதலாக ரூ 1,537 கோடி ஒதுக்கீடு

2023-24 நிதியாண்டு : ரூ 18,661 கோடி
2024-25 நிதியாண்டு : ரூ 20,198 கோடி

உயர்கல்வித்துறைக்குக் கடந்த ஆண்டை விட கூடுதலாக ரூ 1,245 கோடி ஒதுக்கீடு

2023-24 நிதியாண்டு : ரூ 6,967 கோடி
2024-25 நிதியாண்டு : ரூ 8,212 கோடி

பள்ளிக்கல்விக்கு கடந்த ஆண்டை விடக் கூடுதலாக ரூ 3743 கோடி ஒதுக்கீடு

2023-24 நிதியாண்டு : ரூ 40,299 கோடி
2024-25 நிதியாண்டு : ரூ 44,042 கோடி.

▪️ சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ 12,000 கோடி ஒதுக்கீடு.

▪️ ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்

▪️ பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.

▪️ 2025 டிசம்பரில் சென்னை பூவிருந்தவல்லி – கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.

Leave a Response