உயர்நீமன்றம் முடிவு – ஓபிஎஸ் உற்சாகம் எடப்பாடி பதட்டம்

2022 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த மனுக்கள் காலாவதியாகிவிட்டன” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமி, “ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என்பது குறித்து, நிலுவையில் உள்ள மனுவில்தான் முடிவெடுக்க முடியும் என இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அனுமதியளித்து, விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவால் அதிமுக சிக்கல் மறுபடியும் மொதல்ல இருந்து தொடங்குகிறது.

இது ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தையும் எடப்பாடி தரப்புக்குப் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response