மோடி அரசுக்கு டிடிவி.தினகரன் அறிவுரை

மோடி தலைமையிலான பாஜக அரசு, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வேலைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது.அதன் தொடச்சியாக, இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கு அரசியல்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

இதுதொடர்பாக அம்மா முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள பதிவில்…

இந்திய ஆட்சிப் பணி (IAS, IPS, IFS) அதிகாரிகளை மாநில அரசின் இசைவின்றியே எப்போது வேண்டுமானாலும் மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளும் வகையில் மத்திய அரசு விதிகளைத் திருத்தப் போவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

இப்படி ஒரு முடிவெடுக்க மத்திய அரசு தீர்மானித்திருந்தால் அதனைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால், மாநிலங்களில் மிகப்பெரிய நிர்வாக சீர்குலைவு ஏற்படுவதுடன், மத்திய-மாநில அரசுகளின் உறவும் சிக்கலாகிவிடும்.

சீர்திருத்தங்கள் என்ற பெயரில் இத்தகைய குளறுபடிகள் நிகழ்த்தப்படுவது கூட்டாட்சி நடைபெறும் இந்தியா போன்ற நாட்டுக்கு உகந்ததல்ல. இதையெல்லாம் மத்திய ஆட்சியாளர்கள் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response