சிங்களப் பாடகியைத் தமிழ்த்திரையுலகுக்கு அழைத்து வந்த வைரமுத்து? – கடும் எதிர்ப்பு

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் கதாநாயகனாக நடிக்கும் படம் 2019 டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கியது.ஜேடி ஜெர்ரி ஆகியோர் இயக்குகிறார்கள்.

இந்தப்படத்தில் புதுமுக நடிகை கீதிகா திவாரி என்பவர் நடிக்கிறார். நடிகர்கள் பிரபு, விவேக், விஜயகுமார், மயில்சாமி, நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், கோவை சரளா உள்ளிட்ட பெரிய கூட்டம் இப்படத்தில் இருக்கிறது.

இப்படத்துக்கு ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்கிறார்.மதன்கார்க்கி மற்றும் வைரமுத்து ஆகியோர் பாடல்களை எழுதுகிறார்கள்.

இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலைப் பாட அண்மையில் புகழ்பெற்றிருக்கும் சிங்களப் பாடகி யோகானியை அழைத்துப் பாட வைத்திருக்கிறார்கள்.

அக்டொபர் ஆறாம் தேதி அவரை மும்பைக்கு வரவழைத்து மதன்கார்க்கி எழுதிய பாடலைப் பாடவைத்திருக்கிறார்கள்.

அவருடன் ஹாரிஸ்ஜெயராஜ் மற்றும் மதன்கார்க்கி ஆகியோர் இருக்கும் புகைப்படத்தை ஹாரிஸ்ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

அதற்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவா சிங்கள இராணுவ தளபதி பிரசன்ன டி சில்வாவின் மகள்.

சிங்கள இனவெறியர்கள் தமிழர்கள் மீது நடத்திய போரைப் புகழ்ந்து பாடிய பெண்ணை அழைத்து அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த இழிவுநிலை எந்த இனத்திற்கும் வரக்கூடாது.

தமிழுக்கும், தமிழருக்கும் எதிரானவர்களை தேடி தேடி வாய்ப்பு கொடுப்பது தமிழ் திரை உலகின் சாபக்கேடு. @Jharrisjayaraj இதனை நீங்கள் தெரிந்தே செய்கிண்றீர்களா?

இப்படிப் பல எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கின்றன்.

தமிழினப்படுகொலை செய்த பின்பு சிங்கள் இராணுவத்தினரைப் போற்றும் விதமாகப் பல பாடல்களைப் பாடி அவர்களை உற்சாகமூட்டியதோடு தமிழ் மக்கள் மரணத்தை மலினப்படுத்தியவர்.

அப்படிப்பட்ட பாடகியைத் தமிழில் பாட வைக்கலாம் என்று பரிந்துரைத்ததே வைரமுத்துதான் என்று சொல்லப்படுகிறது. அவர் பரிந்துரையில் அவர் மகன் எழுதிய பாடலை அப்பெண்ணைப் பாட வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response