இன்றும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை – மோடியைச் சபிக்கும் மக்கள்

தமிழ்நாடு அரசின் நிதிநிலையில் வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை இலிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.

அதிலிருந்து, சென்னையில் பெட்ரோல் இலிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் இலிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது.

அதிலிருந்து 23 நாட்கள் அமைதியாக இருந்தது மோடி அரசு.

செப்டம்பர் மாத இறுதியிலிருந்து நாள்தோறும் விலையை உயர்த்திவருகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.27க்கும், டீசல் ரூ.96.93க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, பெட்ரோல் ரூ101.53க்கும், டீசல் ரூ.97.26க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 26 காசுகள் உயர்ந்து ரூ.101.79க்கும், டீசல் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு குறைத்த மூன்று ரூபாயில் 2.83 அதிகரித்துவிட்டது.

கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து விலையை உயர்த்தி வரும் மோடி அரசை மக்கள் சபிக்கின்றனர்.

Leave a Response