
ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.
அதன்படி,
1.கந்தர்வக்கோட்டை (தனி)
2.அரூர் (தனி)
3.கீழ்வேளூர் (தனி)
4.திண்டுக்கல்
5.கோயில்பட்டி
6.திருப்பரங்குன்றம்.
இவற்றில் கோயில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ர்ராஜுவும் அமமுக சார்பில் டிடிவி.தினகரனும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
