இத்தாலியில் சிங்களத்தின் சிங்கக்கொடிக்கு நிகராகப் பறந்த புலிக்கொடி – சிங்களர்கள் அதிர்ச்சி

சர்வதேச நாடுகளின் கொடிகளுடன் பட்டொளி வீசிப்பறந்த தமிழீழத்தேசியக்கொடி!

இன்று 03.06.2019 இத்தாலி ஜெனோவா மாநகரில் “உலக அமைதிக்கான பல்லிணக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தமிழீழ மக்களுக்கும் இடம் தரப்பட்டது.பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும்,பலநாட்டுக் கொடிகளுடன் ஏற்றி பறக்கவிடப்பட்டது.

எமது தேசியக் கொடியானது வானுயர கம்பீரத்துடன் பறந்த காட்சியானது விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அறிகுறியாகவே பார்க்கமுடிந்தது.

எமது குருதியில் உயர்ந்த கொடியும்,எமது தியாகத்தில் நிமிர்ந்த கொடியும்,எமது இன அழிப்பினில் பிறந்த கொடியும்,சிங்கள இனவாத கொடிக்கு நிகராக எமது தமிழீழ தேசியக்கொடி இன்று “இத்தாலி ஜெனோவா”,மாநகரில் கம்பீரத்துடன் பறந்தமையானது உலகம் காலம் கடந்து எமது தமிழ் இனத்தைப் புரிந்து கொண்டுள்ளதாகவே எண்ணமுடியுது.

நாம் எந்த மக்களினதும் உரிமையைப் பறிக்கவில்லை.எவரது மண்ணையும் ஆக்கிரமிக்கவில்லை காலம் காலமாய் நாம் வாழ்ந்த மண்ணையும்,இழந்த உரிமைகளையும் மீட்கவே போராடினோம்.உலகமே எமது தார்மீக உரிமையை இனியாவது அங்கீகரிக்க பின்நிற்காதே.

★2009 முள்ளிவாய்க்காலில் எம்மீது நடத்தப்பட்ட இன அழிப்பின் பின்னர்,நாம் எவ்வளவோ கஸ்டத்திலும்,துரோகங்களிலும்,மன உளைச்சல்களின் மத்தியிலும் எமது போராட்டத்தின் வீச்சு குறையாமல் கடந்து வந்ததின் பிரதிபலிப்பாகவே இந்த வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

எந்த ஆக்கிரமிப்பும்,அடக்குமுறையும்,இன அழிப்பும் எமது விடுதலைப் போராட்டத்தைத் தடை செய்யமுடியாது என்பதை இந்நிகழ்வானது நிரூபித்து காட்டியுள்ளது.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் ”

– ஸ்ரீதரன் கனகசிங்கம்

இந்நிகழ்வு சிங்கள அரசையும் சிங்களர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Response