தமிழ் இல்லாத உலகில் உயிர் வாழாது-அறிவுமதி


தமிழ் …ஓர் இனத்தின் மொழியன்று
அது உலக உயிர்களின் உயரிய
மருந்து
ஆம்

பூக்கள் என்று வெறுமனே
சொல்லுதல் தமிழில் இல்லை
குறிப்பாகச் சங்க இலக்கியங்களில்

மொட்டுகள் மலர்ந்தன என்று
தமிழ் எழுதுவதில்லை
வண்டுகள் முட்டி…..
தும்பிகள் ஊதி….
மொட்டுகள் மலர்ந்தன
இதுவே..தமிழர் மரபு

மகரந்தச்சேர்க்கையின் மீதான
சூழலியல் அறிவின்
நுட்ப வெளிப்பாட்டின்..
உலக உயிர்கள் காப்பின்…
அரிய பார்வை இது!!!

படுவண்டு ஆர்க்கும் பன்மலர்…
புறநானூறு..338

மனிதர்கள் இல்லாத உலகில்
பறவைகள் வாழலாம்
பறவைகள் இல்லாத உலகில்
மனிதர்கள் வாழ முடியாது

இது ஒரு சூழலியல் அறிஞரின்
கருத்து
தமிழ் இல்லாத உலகில்
உயிர்கள் வாழ முடியாது என்றும்
சொல்லலாம்

அறிவுமதி

Leave a Response