பாஜக ஆதிக்கத்தால் பீகாரில் தேய்ந்த நிதீஷ்குமார் கட்சி – தொண்டர்கள் அதிருப்தி

பீகாரில் மொத்​தம் 243 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள் உள்ளன. சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6 மற்றும் 11 ஆம் தேதி​களில் இருகட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14 ஆம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது.

இந்தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் (என்​டிஏ), ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரசு அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது.

என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு குறித்த உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் தில்​லி​யில் நேற்று பல்​வேறு கட்​ட​ங்களாக நடை​பெற்​றது.

முதல்​கட்​ட​மாக ஒன்றிய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வீட்​டில் நடந்த கூட்​டத்​தில் பாஜக மூத்த தலை​வர்​கள், ஐக்​கிய ஜனதா தள மூத்த தலை​வர்​கள் சஞ்​சய் ஜா, லல்​லன் சிங் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

பின்​னர், பாஜக தேசியத் தலை​வர் நட்​டா​வின் வீட்​டில் பாஜக உயர்​நிலைத் தலை​வர்​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

இதன்​பிறகு, பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங், நட்​டா, தர்​மேந்​திர பிர​தான், பீகார் துணை முதல்மைச்சர் சாம்​ராட் சவுத்ரி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இந்தக் கூட்​டத்​தில் என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீடு இறுதி
செய்​யப்​பட்​டது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனது சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது….

பீகார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி என்​டிஏ கூட்​ட​ணி​யின் தொகு​திப் பங்​கீட்​டில் சுமுக உடன்​பாடு
எட்​டப்​பட்​டுள்​ளது. இதன்​படி, பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யூ) 101, லோக் ஜனசக்தி – ராம்வி​லாஸ் (எல்​ஜேபி-ஆர்) 29 , ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (ஆர்​எல்​எம்) 6 , இந்​துஸ்​தானி அவாம் மோர்ச்சா (எச்​ஏஎம்) 6 தொகு​தி​களில் போட்​டி​யிட உள்​ளன. கூட்​ட​ணி​யின் அனைத்துத் தலை​வர்​களும், தொண்​டர்​களும் தொகு​திப் பங்​கீட்டை முழு​மனதுடன் வரவேற்​றுள்​ளனர்.

இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதன்மூலம் ஆளும்கூட்டணியில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.பீகாரில்,இன்னும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் தொகுதிப்பங்கீடு நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதேகூட்டணியில் நிதீஷ்குமார் கட்சிக்கு 115 இடங்கள் பாஜகவுக்கு 110 இடங்கள் என்று பங்கீடு இருந்தது.அதாவது மாநிலக்கட்சியான நிதீஷ்குமார் கட்சியை விட ஐந்து தொகுதிகள் குறைவாகவே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் சம அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் அழுத்தத்துக்குப் பணிந்து நிதீஷ்குமார் இதற்கு ஒப்புக்கொண்டார் இது கொஞ்சமும் சரியல்ல என்கிற விமர்சனங்களை அந்தக் கட்சிக்காரர்களே எழுப்பி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response