மு.க.ஸ்டாலினும் இராகுலும் ஒரேமேடையில் தோன்றாதது ஏன்?

2026 தமிழ்நாடு சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரசு போட்​டி​யிடும் 28 தொகு​தி​களுக்​கான மேலிடப்
பார்​வை​யாளர்​களின் ஆலோ​சனைக் கூட்​டம் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் நேற்று நடை​பெற்​றது.

தமிழ்நாடு காங்​கிரசு கமிட்​டித் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், அகில இந்​திய காங்​கிரசைச் சேர்ந்த மூத்த பார்​வை​யாளர்​கள் முகுல் வாஸ்​னிக், உத்​தம்​கு​மார் ரெட்​டி, குவாசி நிசா​மு​தின், தமிழ்நாடு பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர்,அஇகா செய​லா​ளர்​கள் சூரஜ் எம்​.என்​.ஹெக்​டே, நிவே​தித் ஆல்வா
உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

அப்போது, இளைய கம்​பன் எழு​தி, ஸ்டீபன் ராயல் இசையமைப்​பில் உரு​வான ‘தாய்க்​கும் தாயான கட்​சி’ என்ற காங்​கிரசுக் கொள்கை முழக்​கப் பரப்புரைப் பாடல் வெளி​யிடப்​பட்​டது.

கூட்​டத்​துக்​குப் பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கிரிஷ் சோடங்கர் கூறிய​தாவது….

நாடாளு​மன்றக் கூட்​டத்​தொடர் மற்​றும் அனைத்​துக்​கட்சிக் கூட்​டங்​கள் நடை​பெற்று வரு​வ​தால் மல்​லி​கார்​ஜுன
கார்​கே, இராகுல் காந்தி மற்​றும் பிரி​யங்கா காந்தி ஆகியோரின் தமிழ்நாடு வரு​கை​யில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இன்​னும் இரண்டு அல்​லது மூன்று நாட்​களில் தமிழ்நாட்டில் அவர்​கள் பிரச்​சா​ரத்​தைத் தொடங்​கு​வார்​கள்.

புதுச்​சேரி பிரச்​சா​ரத்​தின்​போது இராகுல் காந்தி கேரளா செல்ல வேண்​டி​யிருந்​த​தா​லும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் முன்​கூட்​டியே திட்​ட​மிட்ட நிகழ்ச்​சிகளில் பங்​கேற்க வேண்​டி​யிருந்​த​தா​லும் அவர்​கள்
ஒரேமேடை​யில் தோன்​ற​வில்​லை. இதை வைத்து சில கட்​சிகள் கூட்​ட​ணி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்த
முயல்​கின்​றன.

ஆனால்,மிக விரை​வில் இராகுல் காந்​தி​யும், முதலமைச்சர் மு.க.ஸ்டா​லினும் இணைந்து பிரம்​மாண்​டப்
பிரச்​சா​ரத்தை மேற்​கொள்​வார்​கள். காங்​கிரசுப் பேரியக்​கத்​தின் உண்​மை​யான தொண்​டர்​கள் எப்​போதும்
காங்​கிரசுக் கட்சியில்தான் இருப்​பார்​கள். அவர்​கள் வெளியே செல்​லமாட்​டார்​கள்​.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Leave a Response