பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்குவது வழக்கம். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணி அரசு தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் மாதம் தொடங்குகிறது.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 11 ஆம் நாள் தொடங்கியது. தொடங்கியது.
2019 சனவரி 8 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் இந்த ஆட்சியில் நடக்கும் கடைசி கூட்டத்தொடர் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் வெளியான பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்து அறிக்கையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களில் திருப்பூர் தொகுதி உறுப்பினர் வி.சத்யபாமா 87 விழுக்காடு நாட்கள் வருகை தந்து முதலிடம் பிடித்துள்ளார். 119 விவாதங்களில் பங்கேற்று 412 கேள்விகள் எழுப்பியுள்ளார்.
என்று கூறப்பட்டிருந்தது.
இந்தக் குளிர்காலக் கூட்டத்தொடரை ஒட்டி சத்யபாமா எம்.பி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,
நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மிக முக்கியமான திருப்பூர் தொகுதி பிரச்சனைகள் குறித்தும்/அதி தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேச உள்ளேன். மிக, மிக முக்கியமான/தீர்வுகாணக்கூடிய பிரச்சனைகளை மின்னஞ்சல் அனுப்ப கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் மக்களுக்காக.
மின்னஞ்சல்: officeofsathyabama@gmail.com
இவ்வாறு அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமானோர் அவரை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் சிக்கல்களைத் தெரிவித்துவருகிறார்களாம்.
இதுகுறித்து திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்டோர் கூறுகையில்,
அண்மையில் வெளியான பாராளுமன்ற அறிக்கையில் எங்கள் எம்.பி
தமிழக எம்.பிக்களில் முதலிடம் பிடித்தது எங்களுக்குப் பெருமை தருவதாக அமைந்தது. இப்போதும் அவர் மின்னஞ்சல் மூலம் எங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கக் கேட்டிருப்பதும் இதுவரை எந்த எம்.பியும் செய்யாத செயல். மக்கள் பிரச்சினைகளைப் பரிவோடு அணுகும் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்
என்று கூறுகிறார்கள்.
மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் இவர்போல் நடந்துகொண்டால் நாட்டுக்கு நல்லது.