மாலதிபடையணி போராளியும் மணலாறு கட்டளைத்தளபதி குமரன் அவர்களின் துணைவியும் படைப்பாளியுமான கு. சந்தியா அவர்கள் இந்தோனேஷயாவில் காலமானார்.
கண்ணீர் அஞ்சலி தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்தோனேசியாவில் அகதி அந்தஸ்து பெற்று வசித்துவரும் ரமணன் சியாமா (சந்தியா) சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக இந்திதோனேசியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்போராட்ட வரலாற்றில் போராட்ட காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து 2ஆம் லெப்ரின் மாலதி படையணி போராளியாக இருந்து போராட்ட களங்களில் பங்கெடுத்து படைப்பாளியாகவும் தனது பணியினை செய்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காயமடைந்த இவர், இந்தோனேசியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அகதி அந்தஸ்து கிடைக்கப்பட்டவர்களை வேறு நாடுகளுக்கு குடியமர்த்த வேண்டிய நிலையில், இந்தோனேசியாவில் தடுத்துவைத்து தகுந்த நேரத்தில் குடியேற்ற நாடுகளுக்கு குடியமர்த்தப்பட்டிருந்தால் நிச்சயமாக காப்பாற்றியிருக்க முடியும்.
உறவுகளே எமது கண்டனங்களை ஐநாவிற்கு தெரிவிப்போம் இதனால் மீதி இருக்கின்ற உறவுகளையாவது காக்க முடியும். – சிவ்வதனி பிரபாகரன்