விஜய்-மகேஷ்பாபு இணையும் படம் ; என்ன சொல்கிறார் ஏ,ஆர்.முருகதாஸ்..?


பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு சூப்பர்ஸ்டார், ஆந்திர சினிமாவின் இளவரசன் என அழைக்கப்படும் மகேஷ்பாபு படங்களின் ரீமேக்கில் அடுத்தடுத்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார் விஜய்.. அதன்பின் மகேஷ்பாபுவின் பெயர் இங்கே பிரபலமாக, அவரது படங்கள் டப்பிங் செயப்பாட்டு இங்கே வெளியாக ஆரம்பித்தன.

அதிலும் நல்ல வரவேற்பு கிடைக்க இப்போது முதன்முறையாக ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழ்சினிமாவில் நேரடியாக களம் இறங்குகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் செப்-27ஆம் தேதி ரிலீசாகிறது.

தமிழில் யாரையும் போட்டியாக நினைத்துக்கொண்டு களத்தில் இறங்கவில்லை என கூறிய மகேஷ்பாபு, தெலுங்கு தமிழ், இரண்டுக்கும் ஏற்ற மாதிரி கதை அமையும் பட்சத்தில், தமிழ்சினிமாவில் தொடர்ந்து நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இயக்குனர் முருகதாஸ் விஜய், மகேஷ்பாபு இருவரையும் நன்கு அறிந்து வைத்துள்ளதால் வரும் காலத்தில் இருவரையும் வைத்து படம் இயக்கும் ஏனம் உள்ளதா என கேட்டபோது, எனக்கு ஆசை தான், படம் பண்ண நான் தயார் தான், ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களையும் தமிழ், தெலுங்கு என இரண்டு ஏரியாக்களில் ஒரே படத்தில் திருப்திப்படுத்துவது கொஞ்சம் கஷ்டமான வேலைதான் என கூறியுள்ளார்.

Leave a Response