விவசாயிகளுக்காக களத்தில் இறங்கும் ஜி.வி.பிரகாஷ்..!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பலரும் தங்களுக்கு இயன்ற வகையில் போராடினர். இந்த வகையில் ஜி.வி பிரகாஷ் கொம்பு வச்ச சிங்கம்டா என்ற தலைப்பில் பாடலையும் வெளியிட்டார். அதோடு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு உதவும் பொருட்டு, தொண்டு நிறுவன்ம் ஒன்றை தொடங்க உள்ளார் ஜிவி பிரகாஷ். தொண்டு நிறுவனம் தொடங்குவதற்கான அரசின் வழிமுறைகள் முழுவதும் முடித்த பின் இதற்கான முறையான அறிவிப்பை ஜி.வி.பிரகாஷ் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொண்டு நிறுவனத்திற்காக அடுத்த நடிக்க உள்ள படத்தின் முழு ஊதியத்தையும் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Response