
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில்,விஜய் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என அப்பகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அந்த வரிசையில் விஜய் அரசுக்கு ஆதரவளித்துவரும் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில்…
ஸ்ரீவைகுண்டம் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையில் தவெக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ள நிகழ்வு தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை உருவாக்கியுள்ளது.காவல்துறையில் புகார் அளிக்கக்கூடாது என
எம்எல்ஏ வி.ஜி.சரவணன் மிரட்டியதாக அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார்.சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணமும்,அரசு வேலையும்,பாதுகாப்பும் வழங்கவேண்டும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
