
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்ளது. அமெரிக்கா – ஈரான் போர்,கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தச்சூழலில் பிரதமர் நரேந்திரமோடி சமூகவலைதளத்தில் வெளியிட்ட காணொலியில் கூறியிருப்பதாவது….
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்ளது.இந்தியர்களின் கடின உழைப்பால் இந்தச் சாதனை
சாத்தியமாகியுள்ளது.இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தநேரத்தில் சுதேசிக் கொள்கைகளை இந்தியர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்கவேண்டும்.தேவையில்லாமல் வெளிநாட்டுப் பயணங்களை
மேற்கொள்ளக்கூடாது.வெளிநாடுகளில் திருமணங்களை நடத்தக்கூடாது.தேவையில்லாமல் தங்கத்தை
வாங்கக்கூடாது.
நாட்டின் 100 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் போது வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலட்சியத்தை
எட்டிப்பிடிக்க வேண்டும்.இதற்காக அனைத்துத் தரப்பு மக்களும் கடினமாக உழைக்கவேண்டும்.நாட்டின் 140 கோடி மக்களும் இணைந்து செயல்பட்டால் நம்மால் புதிய சிகரங்களை எட்டமுடியும்.
வீட்டில் இருந்து பணியாற்றும் நடைமுறையை நிறுவனங்கள் பின்பற்றவேண்டும்.இதன்மூலம் பெட்ரோல்,டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.சொந்த வாகனங்களைப் பயன்படுத்தாமல் பேருந்து,ரயில்,மெட்ரோ ரயில்
உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.பெட்ரோல்,டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களுக்கு மாறவேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதமும் பிரதமர் மோடி இதுபோன்ற வேண்டுகோளை முன்வைத்தார்.இந்தியாவின் தங்கம் தேவையில் 99% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.2025-26 ஆம் நிதியாண்டில் வெளிநாடுகளில் இருந்து ரூ.6.4 இலட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.இதற்கு அமெரிக்க டாலரில் பணம் செலுத்த
வேண்டியுள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதிக்கும் டாலரில் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
வெளிநாடுகளிடம் தங்கம்,கச்சா எண்ணெய் வாங்கினால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறையும்.இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.இதன் காரணமாகவே தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்,பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.


