மாணிக்கம் தாகூர் விஜய் திடீர் சந்திப்பு – காங்கிரசு அதிருப்தி

தமிழ்நாட்டில்,காங்​கிரசு உள்​ளிட்ட கட்​சிகளின் ஆதர​வுடன் ஆட்​சி​யமைத்​துள்ளது தவெக.இந்நிலையில்,முதல்​வர் விஜய்யை பிரதமர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தும் பணி​களை அக்கட்சி தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒருபகு​தி​யாகவே, வடமாநிலங்​களில் ‘ரீல்​ஸ்’ பரப்​பப்​பட்டு வரு​​கிறது.

அண்மையில் சட்​டப்​பேர​வை​யில் பேசிய அமைச்​சர் ஆதவ் அர்​ஜு​னா,எதிர்​காலத்​தில் தமிழகத்​தில் இருந்து ஒரு பிரதமர் உரு​வாக்​கப்பட வேண்​டும் என்று குறிப்​பிட்​டார்.அதைத் தொடர்ந்​து,விஜய்​தான் அடுத்த பிரதமர் என
தவெக​வினர் பேசத்தொடங்​கினர்.இது காங்​கிரசுக் கட்​சி​யினரை அதிர்ச்​சி​யடையச் செய்​துள்​ளது.

விஜய்​தான் பிரதமர் வேட்​பாளர் என தவெக​வினர் சொல்​வதை காங்​கிரசு இரசிக்​கவில்லை என்பதன்
வெளிப்​பா​டாகவே அக்​கட்​சி​யின் மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர், “தவெக​வினர் இன்​னும் இரசிகர் மன்ற மனநிலை​யிலேயே உள்​ளனர்” என்​றார்.

இதற்​கிடையே, தனி​யார் நிறு​வனம் வெளி​யிட்ட கருத்​துக் கணிப்​பில், ‘2029 மக்​கள​வைத் தேர்​தலில் பிரதமர் பதவிக்​கான பந்​த​யத்​தில் விஜய் 9 விழுக்காடு ஆதர​வுடன் 3 ஆவது இடத்​தில் இருக்​கிறார்’ என தெரிவிக்​கப்​பட்​டது.

இது தில்லி காங்​கிரசு தலை​மை​யிடம் பெரும் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதையடுத்​து, “நமது
நிலைப்​பாட்​டைத் தெளி​வாகத் தெரி​வித்து விடுங்​கள்” என தில்லி தலைமை தமிழ்நாடு காங்கிரசுக்கு
அறி​வுறுத்​தி​யதாகக் கூறப்படுகிறது.

அதனால்தான்,தமிழக உயர்​கல்​வித் துறை அமைச்​சர் விஸ்​வ​நாதன், “2029 தேர்​தலில் பிரதமர் வேட்​பாள​ராக இராகுல் காந்​தி​தான் நிறுத்​தப்​படு​வார்” என்​றார்.

சுற்​றுலாத் துறை அமைச்​சர் இராஜேஷ்கு​மார், “2029 தேர்​தலில் இராகுல் காந்​தி​தான் பிரதம​ராக வருவார். ஒரு​வேளை தவெக அதற்கு உடன்​ப​டா​விட்​டால் காங்​கிரசுக் கட்சி​யின் 2 அமைச்​சர்​களும் இப்பதவி​யில் நீடிக்க
மாட்​டார்​கள்” என்றார்.

இவற்றிற்கு தவெக தரப்​பில் இருந்து எந்தப் பதி​லும் வரவில்​லை.

இதனால்,விரைவில் செயற்​குழுவைக் கூட்​டி,இராகுலை பிரதம​ராக ஏற்​கும் கட்​சி​யுடன்​தான் கூட்​ட​ணி என
தீர்​மானம் நிறைவேற்​ற​வும் தமிழ்நாடு காங்​கிரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

இந்நிலையில்,சென்னை தலை​மைச் செயலகத்​தில் முதல்​வர் விஜய்​யை,தமிழ்​நாடு காங்​கிரசு தலை​வர்
மாணிக்​கம் தாகூர் மற்றும் பிர​வீன் சக்​கர​வர்த்தி பாமஉ ஆகியோர் நேற்று திடீரென சந்​தித்​தனர்.

அப்​போது,தமிழகத்​தில் தவெக ஆட்​சி​யமைக்க நாங்​கள்​தான் உறு​துணை​யாக இருந்​தோம்.ஆட்​சி​யிலும் அங்​கம்
வகிக்​கிறோம்.தற்​போது ‘விஜய்​தான் பிரதமர் வேட்​பாளர்’ என்று தவெக​வினர் தொடர்ந்து பேசி வரு​வ​தால்,
அகில இந்​திய அளவில் இந்தியா கூட்​ட​ணிக்​குள் பிரச்​சினை​கள் உரு​வாகின்​றன.எனவே,இந்தச் சிக்கலுக்கு உடனே முற்​றுப்​புள்ளி வைக்கவேண்​டும் என்று வலி​யுறுத்​தப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதற்​கு முதல்​வர்​ விஜய்​,உறுதியான எந்தப் பதிலும் சொல்லாமல்,கட்​சி​யினரிடம்​ இதுகுறித்​துப் பேசுகிறேன் என்​று பட்டும்படாமல் பதிலளித்தார் என்று​ கூறப்​படுகிறது.

இதனால் காங்கிரசுக் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response