
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.இதையொட்டி,நேற்று நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக பாமஉக்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கூட்டாக செய்தியாள்ர்களிடம் கூறியதாவது….
தென்மாநிலங்களுக்கு பிரச்சனை வரக்கூடிய வகையில் தொகுதி மறுவரையறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக கடுமையாக எதிர்க்கும்.அதேபோன்று தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு தொகுதிகளை அதிகப்படுத்தினால் தென்மாநிலங்களில் குரல் முழுமையாக அடிப்பட்டுப்போகும்.குறிப்பாக குடியரசுத்தலைவர் தேர்தல்,குடியரசு துணைத்தலைவர் தேர்தல் நடந்தால் தென்மாநிலங்களின் குரல் மிகவும் நசுங்கிவிடும்.மக்கள்தொகை கணக்கு அடிப்படையில் தொகுதிகளை அதிகரிக்க அனுமதிக்கமாட்டோம்
மேலும் மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்களுக்குக் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவேண்டும். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் எந்த ஒரு கூட்டத்திலும் திமுகவினர் கலந்துகொள்ள மாட்டோம். அதேபோன்று காங்கிரசு ஒருங்கிணைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் திமுக கலந்து கொள்ளாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் டி.ஆர்.பாலு கூறியதாவது….
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது எந்த அடிப்படையில் அமையப்போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான எந்தவொரு தகவலையும் ஒன்றியஅரசு இதுவரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.தொகுதிகளின் எண்ணிக்கையை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில்
வெளியாகும் செய்திகள் யாவும் அனுமானங்களின் அடிப்படையிலானவை;அதிகாரப்பூர்வமானவை அல்ல.
அரசு சொல்லாதவரையில் நாங்கள் முடிவு எடுக்கமுடியாது.அதேநேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக
உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள்.
இதற்கான நாடாளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது.அவையில் இதுகுறித்து பேசுவதற்கு அனுமதி கோருவோம்.அவைத்தலைவர்கள் அனுமதி மறுத்தாலும்,தொடர்ந்து வற்புறுத்தி இப்பிரச்சினையை எழுப்புவோம்.
காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு வந்த பின்பும் கூட,தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவதற்கு
ஒவ்வொருமுறையும் கர்நாடக அரசின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை நீடிக்கிறது.காவிரி மேலாண்மைக் குழு கூடி முடிவெடுத்தாலும் கர்நாடகம் சரிவரத் தண்ணீர் திறப்பதில்லை.
எனவே,கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவதைத் தடுக்க தனியாக ஒரு நடுவர்மன்றம்
அமைக்கவேண்டும் என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திப் பேசுவோம்.உடனடியாக பெண்கள்
இடஒதுக்கீடு மசோதா கொண்டுவர வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் மற்றும் காங்கிரசு உறுப்பினர்கள் தனித்தனியாக அமருவதற்கான அதிகாரப்பூர்வ இருக்கை ஒதுக்கீட்டு விவரங்கள் நேற்று (நேற்று முன்தினம்)
அதிகாலைதான் வந்து சேர்ந்தன.இதற்கான கோரிக்கையை ஒரு மாதத்துக்கு முன்பே நாங்கள் சமர்ப்பித்திருந்தோம்.
மாநிலசுயாட்சி,தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ உரிமை,காவிரி விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி உரிமை ஆகிய எதிலுமே திமுக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.


