ஆமை புகுந்த வீடும் அமித்ஷா புகுந்த வீடும் ஒரு​போதும் உருப்​ப​டாது – ப.சிதம்பரம் காட்டம்

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்​பில், முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் பிறந்த நாளை முன்​னிட்டு
பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. அதில் முன்​னாள் ஒன்றிய அமைச்​சர் ப.சிதம்​பரம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசி​ய​தாவது…..

திமுக தலை​மையி​லான கூட்​ட​ணி, காங்​கிரசு இடையி​லான தொகுதிப் பங்​கீடு உடன்​பாடு கையெழுத்​தானது.
கூட்​ட​ணி​யில் அனை​வ​ருக்​கும் சந்​தோசம் நிலைக்​கும்.

பாஜக,நல்லவேளை​யாக அதி​முகவைத் தொட்​டுள்​ளது. இதனால் அதி​முக அடுத்த 5 ஆண்​டு​களில் இருக்​குமா?
என்​பது தெரிய​வில்​லை.
ஆமை புகுந்த வீடும் அமித்ஷா புகுந்த வீடும் ஒரு​போதும் உருப்​ப​டாது.அதே​போல் பாஜக புகுந்த மாநில​மும்
உருப்​ப​டாது.முதலமைச்சர் மு.க.ஸ்டா​லின் தெளி​வாக இருக்​கி​றார், நானும் தெளி​வாக உள்​ளேன்.தமி​ழ்நாட்டில் பாஜக நுழைந்​து ​விடக்​கூ​டாது என்​ப​தில் மிக​வும் எச்​சரிக்​கை​யாக உள்​ளோம்.

ஈரானுக்கு எந்​த​வித அனு​தாப​மும் சொல்​லாமல் இஸ்​ரேலுக்கு துணை​யாக இருப்​போம் எனக் கூறிய​வர்​தான் பிரதமர்.ரஷ்​யா, உக்​ரைன்​போர் நடக்​கும்​போது இது போருக்​கான யுகம் அல்ல என பிரதமர் கூறி​னார். இந்​தியா அமெரிக்​கா​வின் அடிமை​யாகி​விட்​டது. அமெரிக்க அதிபர் வற்​புறுத்​தல் காரண​மாக இரு நாடும் இணைந்து ஒரு
கூட்​டறிக்கை வெளி​யிடப்​பட்​டது.அதில்,அமெரிக்கா ஏற்​றுமதி செய்​யக்​கூடிய பொருட்​களுக்கு பூஜ்​யம் வரி​யும்,
இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்கு ஏற்​றுமதி செய்​யக்​கூடிய பொருட்​களுக்கு 15 சதவீத​மும் வரி எனக்
கூட்​டறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

தமி​ழ்நாட்டில் அதி​முக​வின் கூட்​ட​ணி​யில் பாஜக ஆட்சி அமைந்​து​விட்​டால் தமிழ்​மொழி அழிந்​து​விடும்.ஒரு மொழி வாழவேண்​டும் என்​றால் பேச்​சுமொழி,எழுத்து மொழி,ஆட்சி மொழி​யாக இருந்​தால் மட்​டுமே அது சாத்​தி​ய​மாகும். பாஜக,ஆர்​எஸ்​எஸ் போன்ற அமைப்​பு​கள் இந்​தி​யாவை இந்​துத்​துவ நாடாக மாற்றவேண்​டும் என்ற நோக்​கிலேயே பலகால​மாகச் செயல்​பட்டு வரு​கின்​றன.இதை நாம் மிக​வும் கவன​மாக​வும் எச்​சரிக்​கை​யாக​வும் கையாள
வேண்​டும்.

அதி​முக – பாஜக கூட்​டணி தோற்​கடிக்​கப்பட வேண்​டும். ஒவ்​வொரு முறை​யும் பாஜக நுழைய முடி​யாத அளவுக்கு சிந்​தித்துச் செய​லாற்ற வேண்​டும். வரக்​கூடிய தேர்​தலில் திமுக கூட்​டணி வெற்றிக் கூட்​ட​ணி​யாக தெளி​வாகத் தெரி​கிறது.திமுக தலை​மை​யில் முதலமைச்ச​ராக மு.க.ஸ்டா​லினை அமர​வைத்து, தமிழ்​மொழியைக் காப்​பாற்ற வேண்​டிய கடமை நமக்கு உள்​ளது.

இவ்​வாறு அவர் பேசி​னார்.

Leave a Response