ஆசையாயிருந்தால் எச்.ராஜா இமயமலையில் ஏறட்டும் – மு.வீ காட்டம்

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்,நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறிய​தாவது….

ஒன்றிய, மாநில தனி​யார் பல்​கலைக்​கழகங்​களுக்கு துணைவேந்​தர்​களை நியமிக்​கும் அதி​காரம் ஒன்றிய அரசிடம் மட்​டுமே இருக்​கும் வகை​யில் சட்ட வரைவு தயாரிக்​கப்​பட்டிருப்பது மாநில உரிமைகள் மீது தொடுக்​கப்​படும் தாக்குதலாகும்.

ஆளுநரின் தவறான செய்​கைகளுக்கு நாட்​டின் குடியரசுத் தலை​வரும் துணை போவது அதிர்ச்​சி​யளிக்​கிறது.
இலங்​கை​யில் தமிழர்​களுக்​குப் பயன் கிடைக்​கும் வகை​யில் கூட்​டாட்சி முறையி​லான அதி​காரப் பகிர்வு உறுதி செய்​யப்பட வேண்​டும்.

இந்​தி​யப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 500 சதவீத வரி விதிப்​பால் திருப்​பூர், கோவை போன்ற தொழில் நகரங்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படும். இதைக் கண்​டித்து கோவை, திருப்​பூர், ஈரோடு, சென்னையில் சனவரி 23 ஆம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும்.

மேலும், புதிய தொழிலா​ளர் சட்டத் தொகுப்​பு​கள் உட்பட தொழிலா​ளர்​கள் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரும் ஒன்றிய அரசைக் கண்​டித்து பிப்​ரவரி 12 ஆம் தேதி நடை​பெறவுள்ள அனைத்துத் தொழிற்​சங்​கப்
பொது வேலைநிறுத்​தத்​துக்கு இந்​திய கம்​யூனிஸ்ட் ஆதரவளிக்கும்.

பாஜக மூத்த தலை​வர் எச்​.​ராஜாவுக்கு மலை​யேற விருப்​பம் இருக்​கிறது என்​றால் இமயமலைக்குச் சென்று பயிற்சி எடுத்​து, இமயமலையில் ஏறி இறங்​கலாம்.ஏன் திருப்​பரங்​குன்​றத்​தில் மட்​டும் ஏற நினைக்​கிறார்? அமைதிக்கு எதிரான இந்த பதற்றஅரசி​யல் அவர்​களுக்குக் கைகொடுக்​காது. தமிழ்நாட்டின் ஆட்​டமே வேறு.

இவ்​வாறு அவர் கூறி​யுள்ளர்​.

Leave a Response