இலங்கையில் தமிழர் பூர்வீகப் பகுதிகளில், தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றம், புத்த மடலாயங்களை அமைப்பது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள பூர்வீகத் தமிழ் நிலங்களில் மூன்று முருகன் கோயிலகள் உட்பட உலகில் 9 பெரிய முருகன் கோவில்களை நிறுவ, இலண்டனைச் சேர்ந்த சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுமாமி முடிவெடுத்துள்ளார்.
தமிழ்கக்டவுளான முருகனின் நாமத்தை உலகமெல்லாம் பரப்ப, திடசங்கல்பம் பூண்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
அதுமட்டுமல்லாது, கனடாவில் மிகப்பெரிய அளவில் நிலத்தை வாங்கி, அங்கும் எம்பெருமான முருகனின் கோவில் ஒன்றை கட்ட ஆரம்ப வேலைகள் நடந்து வருகின்றன.
இலண்டன் மாநகரில் மிகப் பெரிய ஆலயத்தை புணரமைத்துக் கட்டியுள்ளனர். இதேபோல், சுவிஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில், ஈழத் தமிழர்களோடு இணைந்து கோவில்களை கட்டும் பணியில், சற்குரு ஸ்ரீ சரவண பாபா சுவாமி ஈடுபட்டு வருகிறார்.
கனடாவில் ஞான வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இந்த ஆண்டு தொடக்கத்தில் நிகழ்ந்தது.
விரைவில் இலங்கையிலும் முருகன் கோயில் அமைக்கும் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.