தொடர் மழை – 7 மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை

வட இலங்கை கடற்கரைப் பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 4 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர்,இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

இதற்கிடையே தீவிரம் அடைந்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும். அதிகபட்சமாக 20 செமீ வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

Leave a Response