பிரசாத்ஸ்டுடியோ என்பது தமிழ்த்திரையுலக வளர்ச்சிக்கு வித்திட்ட இடங்களில் ஒன்று. அதில் மக்கள் பார்வைக்கு வருமுன்பே படக்குழுவினர், புகழ்பெற்றவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் படம் பார்க்கும் பிரிவியூ திரையரங்கம் அமைந்துள்ளது. நீண்டகாலமாக அத்திரையரங்கு இயங்கிவருகிறது. அண்மையில் அது மிகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் புதுப்பொலிவு பெற்று படம் பார்ப்பதை ஒரு சுக அனுபவமாக மாற்றியிருக்கிறது. திரைப்படத்துக்காக அரங்குக்குச் செல்வதை மாற்றி அந்தத் திரையரங்கில் படம் பார்ப்பதற்காகவே திரையுலகினர் வருவதைப் பார்க்கமுடிகிறது.
இந்த அதிரடி மாற்றத்துக்குக் காரணமானவர், அத்த்திரையரங்கின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருக்கும் கல்யாணம். சென்னை ஆனந்த் திரையரங் உரிமையாளர் உமாபதி அவர்களிடம் தொழில் கற்று, தயாரிப்பாளர் ஜீ.வி, இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தவர். கமல்,ரஜினி முதல் இன்றைய முன்னணிநடிகர்கள் வரை இவரை அறியாதவர் தமிழ்த் திரையுலகில் எவருமில்லை எனலாம். அவரிடம் பேசிய போது,
தமிழ்த் திரையுலகில் பழம் பெருமை மிக்க “பிரசாத் லேப் ” நிறுவனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது ” பிரசாத் ப்ரிவியூ தியேட்டர் “. 128 இருக்கைகள் மட்டுமே இருந்த ப்ரிவியூ தியேட்டர் நிர்வாகியாக நான் பொறுப்பேற்ற பின் நிர்வாகத்தினரிடம் கூறி தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டது.
தியேட்டரில் இருந்த இருக்கைகள் அகற்றப்பட்டு வணிக ரீதியாக நடத்தப்பட்டு வரும் தியேட்டர்களில் உள்ள நவீனமான 190 குஷன் இருக்கைகள் பொருத்தப்பட்டு முன்னைக் காட்டிலும் அதிகம் பேர் படம் பார்க்கும் வண்ணம் தியேட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இருக்கைகள் போடும் வசதியும் உள்ளது. கூடுதல் இருக்கைகளுடன் மொத்தம் 230 பேர் லேப் தியேட்டரில் அமர முடியும்.
திரைப்படங்களை பளிச்சென்றும், துல்லியமாகவும் பார்வையாளர்கள் பார்த்துப் பரவச நிலை அடையும் வண்ணம் பழையஸ்கீரின் அகற்றப்பட்டு பல லட்ச ரூபாய் மதிப்புடைய சில்வர் ஸ்க்ரீன் பொருத்தப்பட்டுள்ளது.
ஒலி ஒளி அமைப்பு துல்லியமாக இருக்கும் வகையில் 45லட்ச ரூபாய் செலவில் 4 K தொழில் நுட்பம் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொருத்தப்பட்டுள்ள முதல் ப்ரிவியூ தியேட்டர் ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் மட்டுமே.
அதுமட்டுமல்ல, கூடுதலாகப் பார்வையாளர்கள் வரும்பட்சத்தில், அருகிலேயே உள்ள 70 எம்எம் அரங்கிலும் அமர வைக்க தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்கம், ஆசியாவிலேயே முதல் பெரிய 70 எம்எம் திரை கொண்ட நவீன அரங்காகும். இங்கு 80 பேர் வரை அமர்ந்து படம் பார்க்கலாம்.
விஐபிகள் – செய்தியாளர்கள் சந்தித்துப் பேச நவீன குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெரிய அறையும் லேப் தியேட்டரிலேயே உள்ளது. அருகில் உள்ள அழகிய புல்வெளியில் வீடியோ பைட்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த அரங்குகளில் கழிப்பறைகள் நவீனமயமாக்கம் செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
250இருக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே ப்ரிவியூ தியேட்டர் சென்னையில் “ப்ரசாத் ப்ரிவியூ தியேட்டர் ” மட்டுமே என்பதை திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவரும் நன்கறிவார்கள். அதை மீண்டும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
என்கிறார் கல்யாணம்.