
இந்தோனேசியா,ஆஸ்திரேலியா,நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு,பிரதமர் மோடி அரசுமுறை சுற்றுப்பயணம்
மேற்கொண்டுள்ளார்.ஜூலை 7 அன்று,முதல்கட்டமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமானநிலையத்தில் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்று முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கு பேசிய மோடி,இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர இரு நாடுகளாக்குவதே தீர்வு என்று கூறியுள்ளார்.
இதையொட்டி,உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கை-தமிழீழம் சிக்கலுக்கு இது பொருந்தாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….
இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர இரு நாடுகளாக்குவதே தீர்வு என இந்தியத் தலைமையமைச்சர் மோடி இந்தோனேசியாவில் அறிவித்துள்ளார்.மேலும்,பேச்சுவார்த்தையின் மூலமே உலகநாடுகளுக்கிடையேயுள்ள சிக்கல்களைத் தீர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இசுரேல்-பாலஸ்தீன பிரச்சனை தீர்வதற்கு மோடி கூறிய தீர்வு இலங்கை – தமிழீழம் ஆகியவற்றுக்கும் பொருந்துமே.இரண்டு பிரச்சனைகளும் ஒரே மாதிரியானவை.இருநாட்டுத் தீர்வு ஒன்றுக்குப் பொருந்துமெனில் மற்றொன்றுக்கும் பொருந்தும்.இலங்கையை இரு நாடுகளாக்கும் திட்டத்தை மோடியும், இந்திய அரசும் எதிர்ப்பது ஏன்?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


