ஓபிஎஸ்ஸிடம் சரணாகதி ஆகும் பாஜக – புது உத்தரவு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்து போட்டியிட்டார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

அண்மையில் எடப்பாடியுடன் பாஜக கூட்டணி அறிவிப்பு வந்தது.அதன்பின், தொடர்ச்​சி​யாக ஓபிஎஸ் ஓரம் கட்​டப்பட்டு வந்தார். இதனால்,வெறுத்துப்போய் கூட்​ட​ணி​யில் இருந்து வெளி​யேறு​வ​தாக ஓபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறி​வித்​தார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டா​லினையும் 2 முறை சந்​தித்துப் பேசினார்.

இதனால் அரண்டு போனது பாஜக.இப்போது அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் இணைக்க முயல்கிறது.

ஆகஸ்ட் 26 இல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி மூல​மாக, ஓபிஎஸ் சந்​திப்பை நிகழ்த்தி அவரை மீண்​டும்
கூட்​டணி​யில் இணைக்க பாஜக தலைமை திட்​ட​மிட்​டுள்​ளது. எனவே, அவருக்கு எதி​ராக யாரும் இனி பொது
வெளி​யில் பேசவோ, சமூக வலை​தளத்​தில் கருத்​துகளைப் பதி​விடவோ கூடாது என்​றும், விமர்​சிக்​க​வும் கூடாது என்​றும் நிர்​வாகி​களுக்கு பாஜக தலைமை உத்​தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

தேசிய சனநாயகக் கூட்டணியில்தான் நான் இருக்கிறேன் என்று அவர் பலமுறை சொன்னபோதும் கண்டுகொள்ளாத பாஜக, வெளியேறுகிறேன் என்று சொன்ன பிறகு அவரிடம் சரணாகதி அடைகிறது என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் வருகின்றன.

Leave a Response