பாகிஸ்தானை உடைத்து தனிநாடு அறிவிப்பு – இந்தியா ஆதரவா?

பாகிஸ்தானின் தென்மேற்கு பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக் கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

அண்மையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட நிலையில், பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச் நேற்று தனது சமூகவலை தளத்தில், 1947 ஆகஸ்ட் 11 இல் ஆங்கிலேயர் வெளியேறிய போதே நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்து விட்டோம்.இந்திய ஊடகங்களும், யூடியூபர்களும் இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாகக் குறிப்பிட வேண்டாம். நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, நாங்கள் பலுசிஸ்தானியர்கள். பலுசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும். பலுசிஸ்தானின் தூதரகத்தை டெல்லியில் அமைக்க இந்தியா அனுமதி தர வேண்டும். ஐநாவும் எங்களை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார்.

இதைத் தொடர்ந்து பலுசிஸ்தான் குடியரசு என்கிற சொல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்​நிலை​யல் பிஎல்ஏ செய்​தித் தொடர்​பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகை​யில்…., இந்​தியா – பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் உச்​சத்​தில் இருந்​த​போது ஆக்​கிரமிப்பு பலுசிஸ்​தானில் பாகிஸ்​தான் இராணுவம் மற்​றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்​புக்கு எதி​ராக 71 ஒருங்​கிணைந்த தாக்​குதல்​களை பிஎல்ஏ நடத்​தி​யது.
சமீபத்​திய இந்தத் தாக்​குதல் 51-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் பல மணி நேரம் நீடித்​தது. எதிரியை அழிப்​பது மட்டுமே இந்தத் தாக்​குதலின் நோக்​கமல்ல. தற்​காப்பு நிலைகள் மற்​றும் தயார்​நிலையை வலுப்​படுத்​து​வதும் இதன் நோக்​க​மாகும் என்​றார்.

இதுமட்டுமின்றி, இந்​தி​யா​வின் ஆதரவை நாங்​கள் பெற்​றால் இந்த தீவிர​வாத அரசை (பாகிஸ்​தானை) பலூச் தேசத்தால் ஒழிக்க முடி​யும். இது, அமை​தி​யான, வளமான மற்​றும் சுதந்​திர பலுசிஸ்​தான் உரு​வாக வழி வகுக்​கும் என்றும் பிஎல்ஏ கூறியுள்ளது.

பலுசிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஐநாவும் ஏற்குமா? பாகிஸ்தானை பலவீனப்படுத்த இந்த நகர்வை இந்தியா மேற்கொள்ளுமா? என்கிற கேள்விகள் உலக அரங்கில் எழுந்துள்ளன.இன்னொரு பக்கம், இந்தியாவின் ஆதரவு காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் இதுவரை எதுவும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

Leave a Response