புதிய கல்விக் கொள்கையை த.நா அரசு முதலில் ஒப்புக்கொண்டதா? – உண்மை என்ன?

பு​திய தேசிய கல்விக் கொள்கை தொடர்​பாக தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே கடும் மோதல் எழுந்​துள்​ளது.

இந்த நிலை​யில், பிஎம்-ஸ்ரீ திட்​டத்தை அமல்​படுத்​து​வது தொடர்​பாக தமிழ்​நாடு கல்வித் துறை அனுப்பிய ஒப்​புதல் கடிதத்தை ஒன்றிய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் சமூகவலை தளத்​தில் வெளி​யிட்​டுள்​ளார்.

இதுகுறித்து தர்​மேந்​திர பிர​தான் நாடாளு​மன்​றத்​தில் நேற்று பேசி​ய​தாவது….

பிஎம்-ஸ்ரீ பள்​ளி​களை அமைப்​ப​தற்கு தமிழ்​நாடு ஒப்​புதல் அளித்​தது தொடர்​பாக நாடாளு​மன்​றத்தை நான் தவறாக வழிநடத்​தி​ய​தாக திமுக நாடாளு​மன்ற உறுப்​பினர்​களும், முதல்வர் ஸ்டா​லினும் என்​மீது குற்​றச்​சாட்டைச் சுமத்​தி​யிருந்​தனர். நாடாளு​மன்​றத்​தில் தெரி​வித்த கருத்​தில் நான் உறு​தி​யாக உள்​ளேன். கடந்த 2024 ஆம்​ ஆண்டு மார்ச் 15 தேதி​யிட்டு தமிழ்​நாடு பள்​ளிக்​கல்​வித்​துறை அனுப்​பிய ஒப்​புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்​கிறேன். ஒப்​புதல் தெரி​வித்​து​விட்டு பின்​னர் மறுப்பு தெரி​விப்​பது ஏன்?

என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்​சர் அன்​பில் மகேஷ், சமூகவலை தளத்​தில் வெளியிட்ட பதி​வில் கூறி​யுள்​ள​தாவது….

ஒன்றிய அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தவறான தகவல்​களைப் பரப்​புவ​தால் உண்​மை​கள் மாறி​வி​டாது. தேசிய கல்விக் கொள்​கையை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வரு​கிறது.எங்​கள் நிலைப்​பாட்​டில் திடீர் மாற்​றம் இல்​லை. தமிழ்நாடு அரசின் 2024 மார்ச் 15 ஆம் தேதி​யிட்ட கடித​மும் தேசிய கல்விக் கொள்​கையை ஏற்​ப​தாக இல்​லை. மாணவர்​களுக்கு நன்மை பயக்​கும்​போது மட்​டுமே ஒன்றிய அரசின் திட்​டங்​களை ஏற்​கிறோம். அதற்​காக அனைத்துத் திட்​டங்​களை​யும் கண்​மூடித்​தன​மாக ஏற்க முடி​யாது. அந்தக் கடிதத்​தில், ஒரு குழு அமைக்​கப்​பட்டு அதன்​பரிந்​துரைகளின்​படி திட்​டத்​தில் சேரு​வது குறித்து முடிவு செய்​வோம் என்று தெளி​வாகக் கூறப்​பட்​டுள்​ளது.

மேலும், தேசிய கல்விக் கொள்​கையை திணித்து தமிழ்நாட்டின் கலாச்​சா​ரத்​தை​யும், மரபை​யும் சிதைக்க முயற்​சிப்பவர்​கள்​தான் தற்​போது அரசி​யல் செய்​கின்​றனர். தமிழ்நாட்டுக் குழந்​தைகள் நலனுக்கு எது சிறந்​தது என்​பதை தேர்ந்​தெடுக்​கும் உரிமையை அங்​கீகரித்து ஆதரிப்​ப​தன் மூலம் நீங்​கள் தமிழ்நாட்டின் எதிர்​காலத்​துக்​கும் சிறந்த சேவையை செய்​கிறீர்​கள்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

தர்மேந்திரபிரதானின் குற்றச்சாட்டு குறித்து திருச்சி சிவா கூறியதாவது….

தமிழ்நாடு முதலமைச்சருக்கு 30/08/24 அன்று தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில்,

2024-25 கல்வியாண்டில் பிஎம் ஸ்ரீ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்து, 15.03.2024 அன்று தமிழ்நாடு அரசு ஒரு உறுதிமொழி வழங்கியதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இந்த உறுதிமொழியைப் பெற்ற பிறகு, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DOSEL) தமிழ்நாட்டிற்கு ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. இருப்பினும், 06.07.2024 தேதியிட்ட கடிதத்தில்,புதிய கல்விக் கொள்கை 2020 ஐ முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து குறிப்பிடும் முக்கிய பத்தி கைவிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தமிழ்நாடு அரசு பதிலளித்ததைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்

இவ்வாறு தர்மேந்திர பிரதான் அதில் தெரிவித்துள்ளார்.

2024 ஜூலை மாதத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவியலாது என்று சொல்லிவிட்டீர்களே வருத்தப்படும் தர்மேந்திர பிரதான்,அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தைக் காட்டி நீங்கள் ஒப்புக்கொண்டீர்கள் என்று சொல்கிறார்.

இதனால் தான் ஒன்றிய கல்வி அமைச்சர் உண்மைக்கு மாறாகப் பேசுகிறார் என்று சொல்கிறோம்.

இவ்வாறு திருச்சி சிவா கூறியுள்ளார்.

Leave a Response