வந்தே பாரத் விரைவு தொடர்வண்டியில் அக்டோபர் 13 ஆம் தேதி, சென்னையில் இருந்து கோவைக்கு நடிகர் பார்த்திபன் பயணித்துள்ளார்.
அவர், பயணிகளுக்கான உபசரிப்பு மற்றும் உணவு குறித்த புகார் புத்தகத்தில், இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கிக் கொண்டும், இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம், நன்றி என எழுதியிருந்தார்.
முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு.
‘வந்தே பாரத்’-தில் தந்த உணவு தரமாக இல்லை. பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை.ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன்.
நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென…
என தனது சமூகவலை தளத்திலும் வெளியிட்டு இருந்தார்.
நடிகர் பார்த்திபனின் இப்புகார் குறித்து உரிய விசாரணை நடத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பயணிகளுக்கு இரவு உணவு வழங்கியது, சேலம் ரயில்வே கோட்ட பகுதி என்பதால், சேலம் ரயில்வே அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சேலத்தைச் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கிய உணவு என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அந்த ஒப்பந்ததாரர் உணவு தயார் செய்யும் சமையல் கூடத்திற்கு, சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் குமாரபாண்டுரங்கா தலைமையிலான அலுவலர்கள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது சில குறைபாடுகளைக் கண்டறிந்தனர். அதனை அவர்களுக்கு எடுத்துக்கூறி, அந்த ஒப்பந்ததாருக்கு அபராதம் விதித்தனர். மேலும், இனி பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவு மிகவும் தரமானதாகவும், எவ்விதக் குறைபாடும் இல்லாததாக இருக்கவேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், இப்போது உணவின் தரம் கூடியிருப்பதாகவும், நடிகர் பார்த்திபனின் புகாரால் நன்மை விளைந்தது என்றும் அடிக்கடி அத்தொடர் வண்டியில் பய்ணிக்கும் பயணிகள் கூறுகின்றனர்.