ஊர்ப் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் கம்பெனியாரின் ஆட்சிக்காலத்தின் போது ஏராளமான ஊர்களுக்கான தமிழ்ப்பெயர்கள் ஆங்கில மொழி வசதிக்காக வேறு எழுத்துகளால் குறிக்கப்பட்டன.
குறிப்பாக, எழும்பூர் எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் என்றும், வண்ணாரப்பேட்டை வாஷர்மேன் பேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பிலிர்ந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதனை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஊர்ப் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
உதாரணமாக எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில் இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
அதே போல் திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்கக் கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் – KOYAMPUTHTHOOR, தருமபுரி – THARUMAPURI, ஆலங்குளம் – AALANGGULAM, திருமுல்லைவாயல் – THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி – POOVIRUNTHAVALLI,ட மயிலாப்பூர் – MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை – CHINTHADHARIPETTAI சைதாப்பேட்டை – SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.