
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜூன் 20 அன்று மூன்றாவது போட்டியாக குரூப் பி பிரிவில் இருக்கும் ஈரான், ஸ்பெயின் நாடுகள் மோதின. இதில் ஈரான் ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதால் 3 புள்ளிகளுடனும், ஸ்பெயின் டிரா செய்ததால் 1 புள்ளிகளுடனும் இருக்கின்றன.
துவங்கிய கணத்தில் இருந்தே பந்து ஈரான் கோல் போஸ்ட்டை சுற்றியே வந்து கொண்டிருந்தது. பெரும்பான்மையான சர்வீஸிங் அண்ட் பாஸிங்கை ஸ்பெயின் அணியே கையாண்டது.
அப்படியிருந்தும் ஈரான் அணியின் முன் கள தடுப்பாணை வீரர்கள் மிகத் தீவிரமாக உழைத்து கோல் போஸ்ட்டைத் தொடுவதற்கே அனுமதிக்காமல் தீரமாக விளையாடினார்கள்.
45 நிமிடங்கள் அந்தப் பகுதியிலேயே முகாமிட்டும் 4 முறை மட்டுமே கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்கும் வாய்ப்பினை ஸ்பெயின் வீரர்கள் பெற்றனர். ஆனால் அந்த நான்குமே பிடிபட்டதால் அவர்களது கோல் கனவு சிதைந்தது.
ஆனால் இரு தரப்பினருமே ஒருவருக்கொருவர் வதைத்துக் கொள்வதிலும், தி்ட்டிக் கொள்வதிலும் தீவிரமாய் இருந்தார்கள்.
அதிலும் ஸ்பெயின் அணியைச் சேர்ந்த டியாகோ என்பவரை பல முறை நடுவர் எச்சரித்துப் பார்த்தார். டியோகோ அசரவில்லை. ஸ்பெயின் பயிற்சியாளரிடமே உங்களது வீரர்களை எச்சரித்து வையுங்கள் என்றுகூட கேட்டுக் கொண்டார் நடுவர்.
ம்ஹூம்.. அவர்கள் நடுவரை கண்டு கொள்ளவேயில்லை. இத்தனைக்கும் டெர்ரர் பார்ட்டியாகவே வலம் வந்து கொண்டிருந்தார் நடுவர். பல முறை மஞ்சளட்டையை எடுக்கும் வாய்ப்பு இருந்தும் ஏன் அதைப் பயன்படுத்தவில்லை என்று தெரியவில்லை.
இடைவேளைக்கு முன்னான கடைசி 10 நிமிடங்களில் எப்படியாவது ஒரு கோலாவது போடலாம் என்று ஸ்பெயின் வீரர்கள் அரண் அமைத்துப் போராடியும் ஈரான் வீரர்களின் ஒற்றுமையினால் அது முடியாமல் போனது.
இடைவேளையின்போது இரு அணிகளுமே கோல் போடாமல் இருந்தன.
இடைவேளைக்கு பின்னான ஆட்டத்திலும் சூடு பிடிக்க சில நிமிடங்கள் பிடித்தன. இப்போது ஈரான் வீரர்கள் ஸ்பெயின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டு இரண்டு முறை தாக்குதல் கொடுத்தனர்.
ஆனால் ஸ்பெயின் வீரர்களின் முரட்டுத்தனமான கட்டைக் கால் கொடுக்கும் தாக்குதலினால் அது தோல்வியடைந்தது. கிடைத்த ப்ரீ கிக்கிலும் அவர்களால் கோல் போட முடியாமல் போனது.
52-வது நிமிடத்தில் சரியான பாஸிங்கில் கிடைத்த பந்தை ஸ்பெயின் வீரர் டியாகோ மிக அழகாக கோலுக்குள் திருப்பிவிட முதல் கோல் விழுந்தது.
இதற்குப் பிறகு இன்னும் கோபத்துடனும், மூர்க்கத்துடனும் ஈரான் வீரர்கள் களமாடினர்.
58-வது நிமிடத்தில் ஒரு கூட்டுக் குழப்பத்தில் ஈரான் வீரரின் காலில் பட்டு பந்து கோல் போஸ்ட்டுக்குள் போய்விட கோல் போட்ட கொண்டாடத்தில் ஈடுபட்டார்கள் ஈரான் வீரர்கள். ஆனால் துவக்கத்திலேயே அம்பயர் இதனை ஏற்க மறுத்து மூன்றாவது அம்பயரிடம் கருத்துக் கேட்டார்.
அங்கேயிருந்து வந்த தகவலையடுத்து அது கோல் இல்லை என்று அறிவிக்க நொந்து போனார்கள் ஈரான் அணியினர். அந்த கோல் உண்மையில் ஈரான் வீரரின் காலில் பட்டுத்தான் கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. ஆனால் ஏன் கோல் இல்லை என்றார்கள் என்பது புரியவில்லை.
இதேபோல் அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு கசமுசா. ஸ்பெயின் கோல் போஸ்ட் வாசலில் பந்தை தடவு தடவென்று தடவினார்கள்.
கைகளினால் பந்தை தடுத்ததாக ஸ்பெயின் வீரர்கள் மீது புகார் சொன்னார்கள் ஈரான் வீரர்கள். ஆனால் அம்பயர் அதனை ஏற்க மறுத்தார். உண்மையில் டிவி ரீப்ளேயில் அதுதான் உண்மை என்று தெரிந்தது. நிச்சயமாக இதற்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். கொடுக்காமல் ஈரானின் கனவைச் சிதைத்துவிட்டார் நடுவர்.
இப்படியே தொடர்ந்து பல அடுத்தடுத்த தாக்குதல்களையும் ஸ்பெயின் வீரர்கள் தலையைக் கொடுத்து தடுத்ததால் ஈரான் அணி கடைசிவரையிலும் கோல் போடவே முடியாமல் போய்விட்டது.
அதேபோல் ஈரான் வீரர்களும் ஒரு அணியாய் திரண்டு நின்று மறித்ததால், ஸ்பெயின் அணியும் மேற்கொண்டு கோல் போட முடியாமல் போக.. 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் இந்தப் போட்டில் வென்றேவிட்டது.
இப்படியாக இன்றைய விளையாட்டு மிகவும் பரபரப்பாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது.
இப்போது குரூப் பி பிரிவில் ஸ்பெயினும்,
போர்ச்சுக்கல்லும் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றன.


