செல்லாத நோட்டு விவகாரத்தை விமர்சித்து சிம்பு உருவாக்கிய பாடல்..!


பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு கொண்டு வந்து ஒரு வருடமான நிலையில் அதை விமர்சிக்கும் வகையில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலில் பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் பின்னர் மக்கள் அனுபவித்த கஷ்டத்தை கூறியுள்ளார். பணமதிப்பிழப்புக்கு கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் ஆதரவான டுவிட்டையும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பாடல் வரிகளில் ”நோ கேஷ்” என்ற வார்த்தையும் ”கார்டு வைத்து மட்டும் வாழலாம்” , ”கண்ணை மூடிக்கொண்டே படம் பார்கலாம்” என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் பணமதிப்பிழப்பு முடிந்துகூட மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றும் ஜிஎஸ்டி வரி வந்து மக்களை மீண்டும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்று பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்தப் பாடலின் முடிவில் இதையெல்லாம் கேள்வி கேட்டால் சிறைக்கு அனுப்புகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Leave a Response