மணிரத்னம் படத்தில் சிம்பு – அதிகாரபூர்வ அறிவிப்பு

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் மணிரத்னம். இதனால் அவ்வப்போது பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

தற்போது யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பதை மணிரத்னம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் பணிபுரியவுள்ளார்கள். எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படத்தை பெரும் பொருட்செலவில் தங்களுடைய 17-வது தயாரிப்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அடுத்தாண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

Leave a Response