அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி -அமித்ஷா நிபந்தனை எடப்பாடி ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதில் பங்கேற்காமல்,அதி​முக பொதுச்​ செயலா​ளர்​ எடப்பாடி பழனிச்​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி சென்றார்​. கடந்​த மாதம் சென்​னை​யில்​ இருந்​து காணொலி வாயி​லாக டெல்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலுவல​கத்​தைப் பார்வையிடுவதற்காக அவர்​ சென்றதாகச் சொல்லப்பட்டது​.

எடப்பாடி புறப்பட்டுச் சென்ற பின்பு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரும் புறப்பட்டுச் சென்றனர்.

நேற்றிரவு ஒன்றியய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ எடப்பாடி பழனிச்​சாமி,முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, முனுசாமி,சண்முகம்,தம்பிதுரை உள்ளிட்டோர் சந்தித்துப்​ பேசி​னர்.

அப்​போது, என்ன பேசப்பட்டது என்பது குறித்து இரண்டு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை.

எனினும், இந்​தச் சந்​திப்​பைத்​ தொடர்ந்​து இரவு பத்து மணி அளவில், அமித்​ஷா தனது சமூக​ வலை​தளத்​தில்​,

‘2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’

என்​று குறிப்​பிட்டுள்​ளார்​.

இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைவது உறுதியாகிவிட்டது. அதைத்தான் அமித்ஷா வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்று குறிப்பிட்டுள்ளதால், தமிழ்நாட்டில் அக்கூட்டணியின் தலைவர் யார்? முதலமைச்சர் வேட்பாளர் யார்? கூட்டணி அரசு என்று அறிவித்து போட்டியிடுவார்களா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

அதேசமயம், 2026 இல் தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சி தான் அமையவேண்டும் என்று அமித்ஷா நிபந்தனை விதித்ததாகவும் அதை எடப்பாடி பழனிச்சாமி ஒப்புக்கொண்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Response