மீண்டும் கோகுல்-விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகும் ‘ஜூங்கா’..!


இயக்குனர் கோகுல் ‘ரௌத்திரம்’ படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர். பின்னர் இவர் விஜய்சேதுபதியை வைத்து ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா‘ என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து ‘காஷ்மோரா’ என்ற பிரமாண்ட படத்தை இயக்கினார்.

அவர் இயக்கத்தில் வெளியான மூன்று படங்களுமே பேசப்படும் படங்களாக அமைந்தன. இந்தநிலையில் கோகுல் தற்போது தனது அடுத்த படத்தையும் விஜய்சேதுபதியை வைத்து இயக்கவுள்ளார். இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ‘ஜூங்கா’ என்று பெயரிட்டுள்ளனர்.

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் போல் ‘ஜூங்கா’ படமும் காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். ‘ஜூங்கா’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடக்க உள்ளது. படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். விஜயசேதுபதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். கோகுல், விஜயசேதுபதி இணையும் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது.

Leave a Response