
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, கடந்த ஒரு மாதகாலமாக அரசியல்கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு
வந்தனர்.
தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் இளைப்பாறிக் கொள்வதற்காக சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று வருகிறார்கள்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்றுள்ளார்.உதயநிதி துபாய் சென்றுள்ளார்.
அந்த வகையில்,நடிகரும் தவெக தலைவருமான விஜய், ஆஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் பரபரப்புக்கு என்ன இருக்கிறது?
அவர் பயணம் செய்யத் திட்டமிட்டிருக்கும் நாள்தான் பரபரப்புக்குக் காரணமாக இருக்கிறதென்கிறார்கல்.
அவர்,மே 4 ஆம் தேதி ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. அன்றைய தினம்தான் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன என்பதால் தான் பரபரப்பு..
இதுகுறித்து,நடிகர் விஜய் கட்சியான தவெக வட்டாரங்கள் கூறியதாவது….
பொதுவாக, விஜய் தனது படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதை
வழக்கமாக வைத்திருந்தார்.
தற்போது, தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள 4 ஆம் தேதி அவர் ஆஸ்திரேலியா செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதற்காக, அவர் முன்பதிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும், தேர்தலில் வெற்றி பெற்று நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. எனவே, அன்றைய தினம் முடிவுகள் எங்களுக்குச் சாதகமாக இருந்தால், தலைவர் வெளிநாடு
செல்லும் முடிவைக் கைவிட்டுவிடுவார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனால்,வென்றால் தமிழ்நாடு தோற்றால் வெளிநாடு என்கிற பரப்புரை உறுதி செய்யப்பட்டிருக்கிறதென விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


