1200 தமிழாசிரியர்களுக்குப் பயிற்சி – அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழ்​நாடு தமிழ் கற்​றல் சட்​டம், 2006 ஆம் ஆண்டு கொண்​டு​வரப்​பட்​டது. இச்​சட்​டம், தமிழ்நாட்டில் உள்ள
அனைத்​து​வகை பள்​ளி​களி​லும், தமிழ் மொழியை கட்​டாய பாட​மாகக் கற்​பிக்க வகை செய்​கிறது. இந்​நிலை​யில், தமிழ் கற்றல் சட்​டத்தை முழு​மை​யாக நடை​முறைப்​படுத்​தும் வகை​யிலும், சிபிஎஸ்இ உள்​ளிட்ட இதர வாரி​யங்​களின் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​கள் தமிழை எளிமை​யாக​வும், விருப்​ப​மாக​வும் படிக்​க​வும் அனைத்து
மாவட்​டங்​களி​லும் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்​ளிட்ட பள்​ளி​களில் பணிபுரி​யும் 6 ஆயிரம் தமிழாசிரியர்​களுக்கு
பள்​ளிக் கல்​வித் துறை சார்​பில் பயிற்சி அளிக்​கப்பட இருக்​கிறது.
அந்த வகை​யில், முதல்​கட்​ட​மாக 1,200 பேருக்கு பயிற்சி அளிப்​ப​தற்​கான முகாம் சென்​னை​யில் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் தொடங்கி வைத்​தார்.

அவர் பேசி​ய​தாவது: இந்த முகாமில், தமிழாசிரியர்​களின் கற்​பித்​தல் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் சிறந்த தமிழாசிரியர்​கள் மற்​றும் பேராசிரியர்​களைக் கொண்டு இலக்​கணம், பாடப்​பொருள், செய்​யுள், உரைநடை, மதிப்​பீடு ஆகிய 5 பகு​தி​களாக பயிற்சி அளிக்​கப்​படும். தமிழகத்​தில் உள்ள அரசு பள்​ளி​களின் மாணவர்​கள், ஆசிரியர்​கள் மட்​டுமல்ல தனி​யார் பள்ளி மாணவர்​களும், ஆசிரியர்​களும் எங்​கள் குடும்​பம்​தான்.

இருமொழிக் கொள்கையை உயர்த்திப் பிடித்து சட்டமாக்கிய அண்ணா பெயரில் இயங்கும் இந்த நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் இந்த நிகழ்வும் பொருத்தமாக இருக்கிறது. கடந்த ஆண்டும் இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டது. நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பயிற்சி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் அவ்வப்போதுள்ள தொழில் நுட்பங்கள் மற்றும் அறிவுசார்ந்த விஷயங்களை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நமது மாணவர்​கள் நம்​மை​விட செயற்கை நுண்​ணறி​வு, சாட் ஜிபிடி​யிடம் தான் அதி​கம் கேட்​கின்​றனர்.பிற தொழில் நுட்பங்களை நாம் கருவிகள் மூலம் கற்பதைவிட ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறையின் மூலம் பாடம் நடத்தும் போது கற்றுக்கொள்வதைப்போல வேறு எதுவும் நமக்கும் பெரிய பயனுள்ளதாக இருக்க முடியாது. எந்த தொழில் நுட்பத்தினாலும் அதை கொடுத்துவிட முடியாது. இந்நிலையில், தமிழ் மொழியை நாம் உயர்த்திப் பிடித்தே ஆகவேண்டும்.

அந்த மொழி இல்லாமல் போய்விட்டால் நாம் நமது பண்பாடு கலாச்சாரம் போன்றவற்றை இழந்துவிடுவோம். 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பைத் தமிழன் பயன்படுத்தி இருக்கிறான் என்ற பெருமையை நாம் பார்த்திருக்கிறோம். பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நமது தமிழ் மொழி எப்படி இருந்தது என்பதற்கு சான்றாக கீழடி, கொற்கை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உணர்த்துகின்றன. அரசியல் அமைப்புச் சட்டம் அட்டவணை 8 இல் உள்ள 22 மொழிகளையும் படிக்கலாம் அதில் எந்தத்தவறும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் நமக்கு செல்போன் முக்கியமாகத் தோன்றுகிறது. செல்போனை நாம் உயர்த்திப் பிடிக்கும் நாம் செம்மொழியையும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave a Response