4000 கோடி என்னாச்சு? – இந்தக் கேள்விக்கான பதில் இதுதான்

மிக்ஜாம் புயல் பாதிப்பு தொடர்பான நிவாரணப்பணிகளில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், மழைநீர் வடிகால் பணிகளுக்காகச் செலவிட்ட 4000 கோடி என்னவானது? என்ற கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பினர்.

சென்னையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் எதிர்க்கட்சிகள் மழைநீர் வடிகால் பணிகளுக்கான ரூ.4,000 கோடி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்துவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளீத்துள்ள பதில்,,,,,,

கொசஸ்தலை ஆறு வடிகால் (AG-ADB Fund), அதன் நீளம் 769 கி.மீ , ஆனால் அதற்கான தொகை ரூ.3,220 கோடி, அதில் 523 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக ரூ.3,220 கோடியில் ரூ.1,903 கோடி செலவழித்து பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

கோவளம் வடிகால் (ஜெர்மன் வங்கி நிதி), 360 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.1,714 கோடி மதிப்பீட்டில் 162.72 கி.மீட்டருக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இதற்காக செலவான தொகை ரூ.220 கோடியே 24 இலட்சம். எதிர்க்கட்சிகள் கூறும் 4 ஆயிரம் கோடி இதுதான்.

இப்போது நான் கூறிய பட்டியலின்படி, ரூ.5,900 கோடி வருகிறது. இந்த 5,900 கோடி ரூபாய்க்கான பணிகளில் இன்னும் வேலை முடியவில்லை. வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இதுவரை செலவான தொகை என்றால், ரூ.2,000 கோடிதான் செலவாகி உள்ளது. அதில் எஸ்டிஎம்எஃப்-ல் 59.49 கி.மீட்டர் நீளத்துக்கான கால்வாய் பணிகளுக்கான மதிப்பீடு ரூ.232 கோடி. 47.78 கி.மீட்டருக்கான பணிகள் முடிந்துள்ளன. இதற்காக ரூ.68.35 கோடி செலவாகியுள்ளது. இவ்வாறு இந்த ரூ.5,166 கோடியில் இதுவரை ரூ.2191 கோடிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதித்தொகை இருக்கிறது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response