சமையல் எரிவாயு விலை மேலும் உயர்வு – மக்கள் கொதிப்பு

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலையை இன்று 50 ரூபாய் உயர்த்தியுள்ளது.

இதனால், சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 1118.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளை விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் 1070.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் சமையல் எரிவாயு உருளை விலை 1120.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இப்படி விலையை உயர்த்திக்கொண்டே போவதால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Leave a Response