சனவரி 24, தைப்பூச நாளை அரசுவிடுமுறையாக அறிவிக்க வீரத்தமிழர்முன்னணி கோரிக்கை

திருமுருகன் பிறந்த “தைப்பூச பெருவிழா”விற்கு தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்……

 

தமிழர் பண்பாட்டு அசைவுகளை தனது கதைகளோடு தாங்கி, தமிழரின் திணையொழுக்கமாகிய குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய கூறுகளில் வாழ்ந்த தமிழர் நிலம் முழுமையும் விரவியிருக்கும் கடவுளாக இன்று முருகன் திகழ்கிறார். ஐவகை நிலங்களில் தலை நிலமான குறிஞ்சி நிலமான மலைகளில் இருந்துதான் உலகின் முதல் உயிரினம் தோன்றியது என்பதும், அந்த முதல் உயிரியின் பரிணாம வளர்ச்சியில் தோன்றிய மனித இனத்தில் முதல் இனம் தமிழினம் என்பதும் உயிர்களின் பரிணம அறிவியலில் இருந்து அறிகிறோம்.

இத்தகைய சிறப்புடைய நிலமாகி குறிஞ்சி நில முதல்வனாக முருகக்கடவுள் தமிழர்களால் வழிபடப்படுகிறர். 10 ஆம் நூற்றாண்டு வாக்கில் படையெடுத்த ஆரியர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஏற்கனவே இங்குள்ள முருகனை ஆரியமயப்படுத்தினாலும் முருகவழிபாட்டை தமிழ்நாட்டை விட்டு நகர்த்தவில்லை. இருப்பினும் எங்கெல்லாம் தமிழர்கள் குவிந்து வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர்களால் முருகன் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறார். சிங்கப்பூர், மலேசியா, ஈழம், கனடா, லண்டன், சுவிஸ், பிரான்ஸ், மொருசியஸ் என எல்லா இடங்களிலும் முருகனின் ஆலையம் அமைக்கப்பட்டு தமிழர்களின் வழிபாட்டு கடவுளாக முருகன் திகழ்கிறார்.

இத்தகைய சிறப்பிற்குரிய முருகன் பிறந்த தினமாக “தைப்பூச நாள்” தமிழர்களால் கொண்டாட படுகிறது. தமிழர்களின் வானவியல் நிபுணத்துவம் படி ஆண்டின் இருதியில் தென்திசையில் சுழல்கிற கதிரவன், வானில் பூச நட்சத்திரம் மக்களின் பார்வைக்கு படி வருகின்ற நொடியில் கதிரவன் தென்திசை மாற்றி வடதிசையில் சுழல துவங்குவதாகவும், அந்த நாளையே தமிழர்கள் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளாக தமிழர்கள் கொண்டாடுவதாகவும் அறியப்படுகிறது.

இத்தகைய பெருமைக்கும் சிறப்பிற்கும் உரிய தைப்பூச பெருவிழா திட்டமிட்டு ஆரிய-திராவிட அரசுகளால் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆரிய ஆகமவிதிக்கு உட்படாத அழகு தமிழின் மறுவடிவமாக முருகன் மீது நம்பிக்கையை கொண்டவர்கள் தமிழர்கள். இந்த நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் நடைபெரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு அந்தநாடு அரசுப்பொது விடுமுறையை அறிவித்து உள்ளது.

இந்த மண்ணிற்கு தொடர்பே இல்லாத பல்வேறு பண்டிகைகளுக்கு இந்த தமிழகஅரசு விடுமுறைகளை கொடுத்துள்ளது. ஆனால் இந்த தமிழ் மண்ணில் தமிழர் இறையோன் முருகனின் பிறந்தநாளிற்கு இன்றுவரை அரச விடுமுறை வழங்காதது மிகுந்த உள்நோக்கம் உடையது. தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் என எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறையை கொடுத்த தமிழக அரசு இதுவரை முருகனின் தொடர்பான எந்த ஒரு விழாவிற்கும் விடுமுறை வழங்காதது ஏன் ? இந்த கேள்வியை வீரத்தமிழர் முன்னணி தமிழக அரசை நோக்கி முன்வைக்கிறது.

உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையாக இந்த கோரிக்கையை தமிழக அரசிடம் வைக்கின்றது. வருகின்ற தைப்பூச நாளன்று (சனவரி 24, தை 10) தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையினை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறது. அரசியல் மற்றும் இனபேதத்திற்கு அப்பாற்பட்டு தமிழக அரசு இந்த கோரிக்கை மீது விரைந்து தனது முடிவினை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

திருமுருகனின் தைப்பூச பெருவிழாவை மிக விமர்சையாக கொண்டாட வீரத்தமிழர் முன்னணி திட்டமிட்டுள்ளது. தைப்பூச நாளன்று தமிழகம் முழுவதும் திருமுருகன் குடில் அமைத்து, முருகனின் படம் மற்றும் வேல் இவைகளை வைத்து வணங்கி, தேனுடன் கலந்த திணைமாவு மற்றும் பழங்களை பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடி தைப்பூசத்தில் இருந்து 3 ஆம் நாள் மாலை அவரவர் வாழ்கின்ற பகுதிகளின் முருகன் ஊர்வலம் நடத்த வீரத்தமிழர் முன்னணி திட்டமிட்டு உள்ளது. அதன் தொடர் நிகழ்வாக சனவரி 27, முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில், கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பன், காவடியாட்டம், மயிலாட்டம், பறையிசை என அனைத்துக்கலைகளும் அணிவகுக்க திருமுருகன் ஊர்வலம் நடக்க இருக்கிறது. அன்று மாலை மதுரையில் திருமுருகன் பெருவிழா பொதுக்கூட்டமும் இருக்கிறது.

எனவே தமிழக அரசு, 12 கோடி தமிழர்களின் மனசாட்சி கோரும் கோரிக்கையாக வீரத்தமிழர் முன்னணி கோரும் தைப்பூச பெருவிழாவிற்கு அரசுபொதுவிடுமுறை அறிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

வீரத்தமிழர் முன்னணி

தமிழர் நாடு

Leave a Response