செப்டம்பர் 1 முதல் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தமிழ்நாடு முழுவதும் உள்ள 50 சுங்கச்சாவடிகளில் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மகிழுந்து, மூடுந்து ஆகிய வாகனங்களுக்கு 5 ரூபாயும், சுமையுந்து, பேருந்து மற்றும் பல அச்சுகள் கொண்ட வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை உயரவுள்ளது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி, திருப்பராய்த்துறை, பொன்னம்பலப்பட்டி, கரூர் மணவாசி, வேலஞ்செட்டியூர், தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர் புதூர்பாண்டியாபுரம், மதுரை எலியார்பதி, நாமக்கல் ராசம்பாளையம்,சேலம் ஒமலூர், நத்தக்கரை, வைகுந்தம், வீரசோழபுரம், சேலம் மேட்டுபட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தர்மபுரி பாளையம், குமாரபாளையம் விஜய மங்கலம், விழுப்புரம் விக்கிரவாண்டி மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி உட்பட 28 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

இக்கட்டண உயர்வு வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Leave a Response