மு.க.ஸ்டாலின் கொடுத்த 3 ரூபாய் – 3 நாட்களில் 1.02 ரூபாய் பறித்த மோடி

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளீயிடப்பட்ட அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.

அதன்பின், 23 நாட்கள் விலை மாற்றமின்றி இருந்தது.

இப்போது மீண்டும் நாள்தோறும் விலையேறத் தொடங்கியுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தொடர்ந்து இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரொல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் மூன்று ரூபாய் குறைத்தார். மூன்று நாட்களில் அதில் 1.02 ரூபாய் உயர்த்திவிட்டார் மோடி என்று மக்கள் வருந்திக் கொண்டுள்ளனர்.

Leave a Response