விவசாயிகள் போராட்டம் பற்றி ட்வீட் போட்டு மாட்டிக் கொண்ட சச்சின் – எல்லா மொழிகளும் திட்டு வாங்குகிறார்

3 வேளாண் சட்டங்களை இரத்து செய்யக்கோரி, தில்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் தில்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6 ஆம் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, தில்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ட்விட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாக, பாப் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ் ஆகியோர் உட்பட பலர் பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்கப் பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியைப் பகிர்ந்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதேபோல், சூழலியல் போராளியான சுவீடன் நாட்டைச் சேர்ந்த 18 வயதான கிரேட்டா தன்பெர்க், ‘போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்’ என பதிவிட்டார்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிக்கும் வெளிநாட்டுப் பிரபலங்களை பொறுப்புடன் ட்வீட் செய்யுங்கள் என இந்தியா கூறி உள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இது இந்தியாவிற்கும் எல்லா இடங்களிலும் நாகரீக சமுதாயத்திற்கும் மிகவும் கவலை அளிக்கிறது. இந்திய போலீஸ் படைகள் இந்த ஆர்ப்பாட்டங்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் கையாண்டுள்ளன.

காவல்துறையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளனர், சில சந்தர்ப்பங்களில் பலத்த காயமடைந்தனர்”

விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் . இந்தியாவில் நடைபெறும் இந்தப் போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது.

இந்தப் போராட்டத்தின் மூலம், சில குழுக்கள், இந்தியாவிற்கு எதிராக, சர்வதேச ஆதரவைப் பெற முயற்சிக்கின்றன. சில குழுக்கள் தங்களது கருத்துகளை விவசாயப் போராட்டத்தில் திணித்து விவசாயிகளை திசை திருப்ப முயற்சிக்கின்றன.

இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்திய அரசு அவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளனர், மேலும் பதினொரு சுற்று பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. சட்டங்களை நிறுத்தி வைக்க அரசாங்கம் கூட முன்வந்துள்ளது .

ஆயினும்கூட, இந்த ஆர்ப்பாட்டங்களில் தங்கள் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்த முனைவோர் குறித்து கண்டறிவது துரதிர்ஷ்டவசமானது. இது இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று மிகவும் சாட்சியாக இருந்தது. ஒரு நேசத்துக்குரிய தேசிய நினைவு நாள், அரசியலமைப்பின் தொடக்க ஆண்டு நிறைவு நாள் இந்தியா, மோசமானதாக இருந்தது, வன்முறை மற்றும் காழ்ப்புணர்ச்சி இந்திய தலைநகரில் நடந்தது எனக் கூறி உள்ளது.

இந்தச் சிக்கல் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம்; ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும், இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமை நிலைக்கட்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

2 மாதங்களுக்கும் மேலாக தலைநகரில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை குரல் கொடுக்காத சச்சின், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாட்டவர்களை நோக்கி எதிர்க்குரல் எழுப்பியிருப்பதும், இந்தியாவின் உள்விவகாரத்தில் தலையிடாதீர்கள் என்கிற மத்திய அரசின் கருட்த்ஹை இவரும் வெளிப்படுதியிருப்பதும் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவருடைய ட்வீட்டிற்கு இந்தியாவின் எல்லா மொழிகளிலிருந்தும் எதிரக்கருத்துகள் பதியப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனால் சச்சின் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டர் என்று எல்லோரும் கருத்துச் சொல்கின்றனர்.

Leave a Response