‘பாகுபலி’ பாணியில் ‘சங்கமித்ராவையும் 2 பாகங்களாக உருவாக்கும் சுந்தர்.சி.


ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கும் படம் சங்கமித்ரா.. பாகுபலி’ படத்தைப்போல பிரமாண்டமான வரலாற்று படமாக இதை உருவாக்க இருக்கிறார் சுந்தர்.சி. அதுமட்டுமல்ல. முதன்முறையாக சுந்தர்.சியின் இந்தப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இந்தப்படத்திற்காக ஜெயம்ரவியும், ஆர்யாவும் ஒன்றரை ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்கள்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான் ஆகிய நாடுகளில் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஹாலிவுட் படங்களில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்ற உள்ளனர்.. படத்தின் கதை அமைப்பு சற்றே நீளம் என்பதால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட தீர்மானித்துள்ளாராம் சுந்தர்.சி.. இரண்டு பாகங்களாக வெளியான ‘பாகுபலி’க்கு கிடைத்த வெற்றி தான் அவரை இந்த முடிவெடுக்க வைத்ததாம்.

Leave a Response