
விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும் வேலையில் திரையுலகில் இருந்து பலரும் தங்களது ஆதரவையும் பொறு உதவியும் விவசாயிகளுக்கு அளித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடந்த மாதம் டெல்லிக்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று.
சமீபத்தில் விஷால் நலிந்த விவசாயிகள் 10பேருக்கு உதவினார் அவர் செய்த நற்பணியை பார்த்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற ஆவலோடு இருந்த நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகாவுக்கு நலிந்த விவசாயிகளின் பட்டியலை வழங்கி அவர்களுக்கு உதவுமாறு கூறி அவர்களுக்கு தகவலளித்தார்.
அதன்படி பிரசன்னா மற்றும் சினேகா நலிந்த விவசாயிகள் 10 பேருக்கு உதவும் வகையில் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைவரும் குரல் கொடுத்து வரும் இவ்வேளையில் பிரசன்னா, சினேகா ஆகியோர் செயலில் இறங்கியுள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


