தேர்தல் மோசடிக்காக 1000 கோடி இலஞ்சம் மோடி அரசு கவிழும் – மம்தா பரபரப்புப் பேச்சு

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதியும், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதியும் இரண்டுகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டத் தேர்தலுக்கு இன்னும் சிலதினங்களே உள்ள நிலையில் பரப்புரை சூடு பிடித்துள்ளது.மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைக்குப் பிறகு வௌியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 90 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரசுக் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி ஆரம்பம் முதலே எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டம் கந்தகோஷ் என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல்பரப்புரைப் பேரணியில் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய மம்தாபானர்ஜி….

தேர்தலுக்கு முன்பாக பாஜக வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கிறது.வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலில் வெற்றிபெற பாஜக பல சூழ்ச்சிகளைச் செய்கிறது.வாக்காளர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வாக்களிக்கும்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாகக் கண்காணிக்க வேண்டும்.எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது நாடு இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேடு. நடப்பாண்டில் ஒன்றிய பாஜக அரசு கவிழும்.இது அனைவருக்கும் தெரியும் என்றார்.

அதன்பின், பாங்குரா மாவட்டம் ஓண்டாவில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி…

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசு ஆட்சியை அகற்ற ஆம்ஜனதாஉன்னயன் கட்சித் தலைவர் ஹூமாயூன் கபீருடன் வாக்குகளைப் பிரிப்பதற்காக ரூ.1,000 கோடி ரூபாய்க்கு பேரம் பேசியுள்ளது பாஜக. இதற்காக ஹூமாயூன் கபீருக்கு முன்பணமாக ரூ.200 கோடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக கபீர் பேசும் வீடியோ வௌியாகி உள்ளது என குற்றம்சாட்டினார்.

முன்னதாக,
மேற்கு வங்​கத்​தில் முஸ்​லிம் வாக்​கு​களைத் திசைதிருப்ப பாஜக​விடம் ஹுமாயூன் கபீர் ரூ.1,000 கோடி பேரம் பேசி,ரூ.200 கோடி முன்​பணம் பெறு​வது போன்ற காட்​சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இதையடுத்​து, ஹுமாயூன் கபீருடன் தனது கூட்​ட​ணியை முறித்​துக் கொள்​வ​தாக ஒவைசி அறி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவரது ஏஐஎம்​ஐஎம் கட்சி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில்,

ஹு​மாயூன் கபீர் தொடர்​பான இரகசி​யப் பதி​வின் தகவல்​கள் அதிர்ச்சி அளிப்​ப​தாக உள்​ளன.இது,மேற்குவங்க
முஸ்​லிம்​களை அரசி​யல்​ரீ​தி​யாகப் பாதிப்​புக்​குள்​ளாக்​கு​வதை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது.முஸ்​லிம்
சமூகத்​தின் கண்​ணி​யம் மற்​றும் நலன்​களைக் கேள்விக்​குள்​ளாக்​கும் எந்​தவொரு கருத்​துடனோ அல்​லது
நடவடிக்​கை​யுடனோ எங்​களால் இணைத்​துக்​கொள்ள இயலாது.எனவே மேற்குவங்கத் தேர்​தலில் தனித்துப்
போட்​டி​யிடு​வோம் என்று குறிப்​பிட்​டுள்​ளது.

இதுகுறித்து அமைச்​சர் பிர்​ஹாத் ஹக்​கீம் கூறுகை​யில்,

கபீர் முஸ்​லிம்​களை பாஜக-விடம் விற்​று​விட்​டார்.மால்​டா,முர்​ஷி​தா​பாத் போன்ற மாவட்​டங்​களில் முஸ்​லிம்
வாக்​காளர்​களைப் பிளவுபடுத்த பாஜக முயற்​சிக்​கிறது.இந்​து,முஸ்​லிம் மற்​றும் மத்​துவா சமூகங்​களை
திசை​திருப்​பும் நோக்​கில்,பி,சி என 2 அணி​களை பாஜக உரு​வாக்​கி​யுள்​ளது.அந்த வீடியோ​வில் பிரதமர்
அலு​வல​கத்​தின் பெயரும் குறிப்​பிடப்​பட்​டுள்ள நிலை​யில்,இதில் தொடர்​புடைய அதி​காரி​கள் மீது ஏன் வி​சா​ரணை நடத்​தப்​பட​வில்​லை.அமலாக்​கத்​துறை இவ்​விச​யத்​தில்​ மவுனம்​ சா​திப்​பது ஏன்​? என கேள்​வி எழுப்​பியுள்​ளார்​.

அந்த காணொலியில் பிரதமர் அலுவலகமும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று தெரியவந்திருப்பதும் இவ்வாண்டில் மோடி அரசு கவிழும் என்று மம்தா பானர்ஜி பேசியிருப்பதும் ஒன்றிய அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response