பணமெடுத்தால் கட்டணம்- வங்கிக்கொள்ளைக்கு எதிராக நூதனபோராட்டம்


“4 முறைக்கு மேலான வங்கி பணப்பரிவர்த்தனைக்கு ரூ.150 கூடுதல் கட்டணம் விதித்திருக்கும் ஆக்சிஸ், ஹெச்டிஎப்சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட தனியார் வங்கிகளின் தன்னிச்சையான நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்து உத்தரவிடக்கோரியும், Visa, Master Card நிறுவனங்கள் வசூலிக்கும் சேவை கட்டணங்களை ரத்துசெய்ய கோரியும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நெற்றியில் பட்டை நாமம், தலையில் துண்டு போட்டு கொண்டு சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி
புரோட்டோ கால் மேலாளர் திரு. அருண்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது தலைமை (GPO) தபால் நிலையத்தில் இருந்து பாரத பிரதமர், நிதியமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கி இயக்குனர் ஆகியோருக்கு பதிவு தபால் வாயிலாக மனு அனுப்பி வைக்கப்பட்டது.

Leave a Response