மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மனையில் டிசம்பர் 1 அன்று காலமானார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்குலாப் (75) பிறந்தார். இவரது இயற்பெயர் சாகுல் ஹமீது. தனது பள்ளிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்து விட்டு, மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழ் படித்தார். படிப்பை முடித்த பின்னர் சென்னை ராயப் பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 35 வருடங்களாக தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் எனப் பன்முகம் கொண்ட இன்குலாப், பொதுவுடைமைச் சிந்தனையால் கவரப்பட்டவர். இவருடைய ‘நாங்க மனுஷங்கடா’, கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற படைப்புகள் காலத்தால் அழியாதவையாகும். இலக்கியப் பணிகளுக்காக சிற்பி இலக்கிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இருதய நோய், மூச்சுதிணறலால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அவர், முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து, அவரது உடல் ஊரப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. மக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது.
அவரின் உடல் டிசம்பர் 3-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவுள்ளார்கள். இவருக்கு மனைவி கமருனிஷா, மகன்கள் செல்வம், இன்குலாப் மற்றும் மகள் ஹானிமா பர்வீன் ஆகியோர் உள்ளனர்.
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்களின் மறைவிற்கு அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அவ் அறிக்கையினை இன்குலாப் அவர்களின் குடும்பத்தினரிடம் திரு காசிஆனந்தன் அவர்களும், அவுஸ்ரேலியா தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் செயற்பாட்டாளர் அரண் மயில்வாகனம் அவர்களும் நேரில் சென்று ஆறுதலை தெரிவித்து அறிக்கையினை கையளித்தனர் .
அத்தோடு அனைத்துலக தமிழர் ஒருங்கிணைப்பு குழுக்களின் சார்பாக மலர்வளையமும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவின் இரங்கல் அறிக்கையும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இரங்கல் அறிக்கையும் அவரது குடுத்பத்தினரிடம் கையளித்தனர்.
அதில்,
தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரும், தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் உறுதுணையாளருமான முற்போக்குக்கவிஞர் இன்குலாப் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக 01.12.2016 அன்று சென்னையில் காலமானார்.
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழக்கரை என்னும் கிராமத்தில் பிறந்தவர் இவர். சாகுல் அமீது என்பது இவரது இயற்பெயராகும். கவிதை எழுதுதல் மட்டுமன்றி,நாடகத்துறை,சொற்பொழிவு,பத்திரிகைத்துறைஉள்ளிட்டபன்முகத்திறமைகொண்டவர் இன்குலாப்.
தமிழ் மொழி மீது அளவற்ற பற்றுக் கொண்டிருந்த அவர் சாதீய ஒடுக்கு முறை, இந்தி மொழித்திணிப்பு என்பவற்றுக்கெதிராகப் போராடியவர். இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளாகி,சிறைவரைசென்றவர்.
எப்போதும் ஒடுக்குமுறைகளுக் கெதிராகவே அவரது எழுத்துக்கள் மிளிர்ந்தன.
தமிழீழத் தேசியத்தலைவரிடத்தும் தமிழீழ மக்களிடத்தும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தகவிஞர் இன்குலாப், இந்திய அமைதிப்படையினர் எங்கள் மக்கள் மீதுதொடுத்த போரை வன்மையாக எதிர்த்துக் குரலெழுப்பியவர்.
இக்காலப்பகுதியைவெளிப்படுத்தி,“ஒப்புக்குபோர்த்தியஅமைதித்திரையின் ஓரங்கள் பற்றியெரிகின்றன…. ”என்றபாடலைஎழுதியிருந்தார். தமிழீழவிடுதலைப் போராட்டத்தை முதன்மைப்படுத்தி அவர் எழுதியகவிதைகள் 1990இல், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப்பிரிவினரால் தொகுக்கப்பட்டுநூலாகவெளியிடப்பட்டது. இக் கவிதைகளின் ஊடாகதமிழீழவிடுதலைப்போரட்டத்தின் தேவைபற்றியும்,அதன் நியாயத்தன்மைமற்றும் செல்நெறிபற்றியஅவரதுஆழமானகரிசனைஎமக்குமிகுந்தமனவெழுச்சியைஏற்படுத்தினஎன்பதை இவ் துயரவேளையில் நாம்தோழமையுணர்வுடன் எண்ணிப்பார்க்கின்றோம்.
2006இல் தமிழகஅரசின் இயல்,இசை,நாடகமன்றம் இவருக்குகலைமாமணிவிருதைவழங்கியது. ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டுகொள்ளாத அன்றைய தமிழக அரசைக் கண்டித்து, தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதையும் தங்கப்பதக்கத்தையும் திருப்பி அனுப்பிய தன்மான உணர்வுகொண்டவர் கவிஞர் இன்குலாப்.அவரதுமறைவுச்செய்திகேட்டுதமிழீழமக்களாகியநாம் பெருந்துயரடைகின்றோம்.
அதேவேளை அந்த உணர்வுக்கவிஞனுக்கு எமது சிரந்தாழ்த்திய வணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். அவரின் குடும்பத்தினர்,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் எமதுஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.