சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணிக்கு டிடிவி அறிவுரை

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று பேசினார்.அப்போது அவர் கூறிய​தாவது….

தூய சக்தி என்று கூறி வெற்றி பெற்ற தவெக, பெரும்​பான்மை கிடைக்​காத நிலை​யில் என்​னென்ன குறுக்கு வழிகளை முயற்சி செய்து ஆட்சி அமைத்​தார்​கள் என்​பது அனை​வருக்​கும் தெரி​யும்.

இன்​றைக்கு முதல்​வரும்,அவரது அமைச்​சர்களும் தினம் தினம் சினிமா கதைகளை போல் ரீல்
விட்​டுக்கொண்​டிருக்​கின்​றனர்.தனது எம்​எல்​ஏக்​களை தக்​க​வைத்​துக் கொள்​ள​வும்,எதிர்க்​கட்சி எம்​எல்​ஏக்​கள் தங்​களை தாக்கிப் பேசுவதைத் தடுக்கவேண்​டும் என்​ப​தற்​காக​வும் கார் கொடுப்​ப​தாக கூறி,ஊரான் வீட்டு நெய்​யில் ஸ்வீட் செய்து கொண்​டிருக்​கிறார் முதல்​வர்.

என்​னை​யும்,சசிகலா​வை​யும் அதி​முக​வில் மீண்​டும் சேர்க்கவேண்​டும் என முன்​னாள் அமைச்​சர்​கள் பலரும்
எடப்பாடி பழனிச்​சாமிக்குக் கடிதம் எழு​தி​யுள்​ளனர்.அவர்​களது விருப்​பம் நியாய​மானது​தான்.

ஆனால்,எடப்பாடி பழனிச்​சாமி மீது குறைசொல்​வதைக் காட்​டிலும்,கட்​சியை மீண்​டும் ஆட்​சிக்குக் கொண்​டு​
வரு​வதற்கு என்ன செய்யவேண்​டுமோ? அதை உள்​ளிருந்து அவரோடு பேசி சரிசெய்யவேண்​டும்.

அமமுக​வும்,அதி​முக​வும் வேறு அல்ல.இரண்​டுமே மறைந்த முதல்​வர் ஜெயலலி​தா​வின் கட்​சிகள்​தான்.நான்
இப்​போதும் அதி​முக​வுடன்​தான் நிற்​கிறேன்.எப்​போதும் அதி​முக​வுடன் ஒரு தொண்​ட​னாக உறு​துணை​யாக
நிற்​பேன்.மீண்​டும் ஜெயலலி​தா​வின் ஆட்சி மலரவேண்​டும்.பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக்
கூட்​ட​ணி​யில் தொடர்ந்து நாங்​கள் பயணிப்​போம்​.

இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Leave a Response