வாக்கு இயந்திரங்களில் மோசடி என்பதற்கு வலுச்சேர்க்கும் நிகழ்வு – விவரம்

மே 4 ஆம் தேதி வெளி​யான தமிழக சட்​டசபை தேர்​தல் முடிவு​களின்​படி,உத்திரமேரூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட திமுக வேட்​பாளர் க.சுந்​தர் 70,694 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில்,அவரைவிட 14,223 வாக்​கு​கள் அதி​கம் பெற்​று, 84,917 வாக்​கு​களு​டன் தவெக வேட்​பாளர் முனிரத்​தினம் வெற்றி பெற்​றார்.

இருப்​பினும்,வாக்​குப்​ப​திவு முடிவு​கள் குறித்து சந்​தேகம் தெரி​வித்த திமுக வேட்​பாளர் க.சுந்​தர்,10 குறிப்​பிட்ட
வாக்​குச்​சாவடிகளின் வாக்​குப்​ப​திவு​களை சரி​பார்க்​கக்​கோரி தேர்​தல் ஆணை​யத்​திடம் மனு அளித்​தார்.அதற்​கான
கட்​ட​ணங்​களைச் செலுத்​தி​யதைத் தொடர்ந்​து,தேர்​தல் ஆணை​யத்​தின்உத்​தர​வுப்​படி காஞ்​சிபுரம் ஆட்​சி​யர் சினேகாதலை​மை​யில்,பெல் பொறி​யாளர்​கள் உதவி​யுடன் வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் சரி​பார்க்​கும் பணி கடந்த 3 நாட்​களாக நடை​பெற்​றது.

வாக்​குச்​சாவடி இயந்​திரங்​கள் வைக்​கப்​பட்​டிருக்​கும் கிடங்​கிலேயே இந்​தப்பணி​கள் நடை​பெற்று வந்​தன. வாக்குப்பதிவு சரி​பார்ப்பு தொடங்​கிய​போது மாதிரி வாக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டுக் காட்​டப்​பட்​டன.

ஆனால் பழைய வாக்​குப்​ப​தி​வின்​போது விவிபேட்​டில்பதி​வான வாக்​கு​களை எண்ணவேண்​டும் என்று க.சுந்​தர் கோரிக்கை வைத்​தார்.தேர்​தல் ஆணைய விதிப்​படி அதை எண்ண முடி​யாது என்று ஆட்​சி​யர் தெரி​வித்​தார்.

இதனைத் தொடர்ந்​து,க.சுந்​தர் ஆட்​சேபனை கடிதம் கொடுத்​து​விட்​டு,அதன்பிறகு வாக்​குப்​ப​திவு சரி​பார்ப்பு
நடவடிக்​கை​களில் பங்​கேற்​க​வில்லை.

இந்​நிலை​யில்,வாக்​குப்​ப​திவு சரி​பார்ப்பு நடவடிக்​கைகள் நேற்று முடிவ​தாக இருந்​தது.கடைசி​யாக 314 ஆவது
வாக்​குச்​சாவடி​யின் வாக்​குப்​ப​திவு இயந்​திரம் சரி​பார்க்​கப்​படும்​போது,அதை வி​விபேட் உடன் இணைக்க
முடிய​வில்​லை.இதனால் பணி​யைத் தொடரமுடி​யாமல் போனது.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர் சினேகா கூறுகை​யில்,ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 9 மணிக்​குள் பழு​தான
இயந்​திரத்​துக்​குப் பதிலாக வேறு இயந்​திரத்​தைத் தேர்வு செய்​வதா அல்​லது அதே இயந்​திரத்தை பொறி​யாளர் மூலம் சரிசெய்து பார்க்கவேண்​டுமா என்​பதை திமுக வேட்​பாளர் தெரிவிக்க வேண்​டும் எனக் கூறி​னார்.

இதுகுறித்து திமுக வேட்​பாளர் க.சுந்​தர் கூறும்​போது,நாங்​கள் சந்​தேகத்​துக்​குரிய​தாகக் குறிப்​பிட்​டதே 10
இயந்​திரங்​களைத்​தான்.அதில் ஒன்று பழுது எனக்கூறு​வதை ஏற்கமுடி​யாது.மேலும்,நாங்​கள் கேட்​டபடி விவிபேட் வாக்​குச்​சீட்​டு​கள் சரி பார்க்​கப்​ப​டாத​தால்,தற்​போதைய நடவடிக்கை எங்​களுக்​குத் திருப்தி அளிக்​க​வில்​லை.எனவே இதனை எதிர்த்​து நீதி​மன்​றத்​தை நாடவுள்​ளோம்​ என்று கூறியுள்ளார்.

எல்லாத் தொகுதிகளிலும் எல்லா வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வாக்குச்சீட்டுகளைச் சரிபார்க்க முடியாது என்பது தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு.ஒரு வேட்பாளர்,சந்தேகம் எழுப்பும்போது அதைச் சரிபார்க்கக் கூட முடியாது என்று சொல்வதன் மூலம் வாக்கு இயந்திரங்களில் மோசடி நடத்தவியலும் எனும் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது என சமுதாய ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Response