ஜெ.அன்பழகன் மறைந்தார் – திமுகவினர் சோகம்

சென்னை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் உறுப்பினரான, திமுகவைச் சேர்ந்த ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்குக் காலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னை, குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் ஜெ.அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.தொடக்கத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென சொல்லப்பட்டது.

சிலநாட்களில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென நேற்று சொல்லப்பட்டது.

இந்நிலையில்,கடந்த 10 நாட்களாக மருத்துவமனியில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் திமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Response